திருப்பதியில்தான் எனது திருமணம் நடைபெறும்: நடிகை ஜான்வி கபூர்…

மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவரது மகள் ஜான்வி கபூர். இவர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகி இருக்கிறார். இதை அடுத்து தமிழ் படத்தில் நடிக்க கதை கேட்டு வருகிறார்.
முன்னதாக, ஜான்வி கபூர் மற்றும் ஷிகர் பஹாரியா இருவரும் ஒன்றாக திருப்பதி பாலாஜி கோவிலுக்குச் சென்றனர். இதை தலைப்புச் செய்தியாக வெளியிட்டனர்.
இதற்கு, ‘இந்து மதத்தில் போற்றப்படும் கடவுளான பாலாஜியின் ஆசீர்வாதத்தைப் பெறுவதே எங்களின் நோக்கமாக இருந்தது’ என்றார் ஜான்வி.
அந்த நிகழ்ச்சிக்காக, ஜான்வி தன்னை அசத்தலான தங்கப் புடவையில் அலங்கரித்துக் கொண்டார், அதே சமயம் ஷிகர் ஒரு பாரம்பரிய வெள்ளை நிற வேட்டி-குர்தா உடையைத் தேர்ந்தெடுத்தார். பல சந்தர்ப்பங்களில் ஒன்றாகப் பார்த்தாலும், ஜான்வி மற்றும் ஷிகர் இன்னும் தங்கள் உறவின் தன்மையை உறுதிப்படுத்தவில்லை’ என்பது ரகசியமாய் உள்ளது.
மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரனான ஷிகர், தொழில்முனைவோர், போலோ வீரர் மற்றும் பரோபகாரர் என தனது முயற்சிகளின் மூலம் தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளார்.
ஜான்வி, ஷிகருடனான தனது தொடர்பை பற்றிக் கூறும்போது, ‘அந்த உறவு மிக இனிய நினைவுகள்’ என்கிறார்
இந்நிலையில், ஜான்வி கபூர் தனது திருமணம் குறித்து தெரிவிக்கையில், ‘திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். மேலும், கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருமலையில் வாழ்க்கையை கழிக்க வேண்டும். இதுதான் எனது விருப்பம்’ என கூறியுள்ளார்.
