என்னை ட்ரோல் செய்யும் குழுவிடம் பேசினேன்: நடிகை பூஜா ஹெக்டே விசித்திர தகவல்
ஏன் என்னை குறிவைத்து நெகடிவிட்டி செய்தி பரப்புகிறீர்கள்? என கேட்டதற்கு, அவர்கள் சொன்ன பதில் விசித்திரமாக இருந்தது என கூறியுள்ளார் பூஜா. இது பற்றிய தகவல்கள் காண்போம்..
விஜய்க்கு ஜோடியாக ஜனநாயகன், சூர்யா ஜோடியாக ரெட்ரோ போன்ற படங்களில் நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே கூறியதாவது,
‘ட்ரோல்களைப் பார்க்கும்போது பல நேரங்களில், அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிஆர் விஷயத்தில் நான் மிகவும் மோசமாக இருக்கிறேன். மீம் பக்கங்கள் என்னை தொடர்ந்து ட்ரோல் செய்த ஒரு காலம் இருந்தது.
அவர்கள் ஏன் என்னைப் பற்றி தொடர்ந்து நெகடிவிட்டி பரப்புகிறார்கள் என்று நான் யோசித்தேன். அதுவும் என்னை சரியாக டார்கெட் செய்து ட்ரோல் செய்வதை நான் உணர்ந்தேன். மற்றவர்களைக் குறைத்து மதிப்பிட ஒரு கும்பல் நிறைய பணம் செலவிடுகிறார்கள் என்று பின்னர் எனக்குப் புரிந்தது. அதை நான் அறிந்தபோது, என் பெற்றோரும் நானும் மிகவும் வருத்தப்பட்டோம்.
ஆனால், நான் அதை ஒரு பெருமையாக எடுத்துக் கொண்டேன். ஏனென்றால், யாராவது உங்களை குறைத்து மதிப்பிட விரும்பினால், நீங்கள் அவர்களை விட உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒன்றும் பிரச்சினை இல்லை என்று நான் என் பெற்றோரை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தேன்.
ஆனால், ஒரு கட்டத்திற்குப் பிறகு, அது அதிகமாக இருந்தது. என்னை ட்ரோல் செய்ய சிலர் லட்சக்கணக்கில் செலவிடுகிறார்கள் என்று நான் கண்டுபிடித்தேன்.
பின்னர் என்னை ட்ரோல் செய்யும் மீம் பக்கங்களைத் தொடர்பு கொண்டு பிரச்சினை என்னவென்று அவர்களிடம் கேட்கும்படி என் குழுவிடம் சொன்னேன்.
அவர்கள் சொன்ன பதில் நேரடியாக இருந்தது. உங்களை ட்ரோல் செய்ய எங்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். இனி இதை நிறுத்தவோ, அல்லது அந்த அணியை திருப்பி ட்ரோல் செய்யவோ நீங்க எவ்வளவு தருவீர்கள் என கேட்கிறார்கள். அது மிகவும் விசித்திரமாக இருந்தது.
ஆனால், என்னை ஏன் ட்ரோல் செய்கிறார்கள் அல்லது அதற்குப் பின்னால் என்ன காரணம்? என்று எனக்குத் தெரியவில்லை. சில நேரங்களில் என் பதிவின் கீழ் எனக்கு எதிராக ஒரு பெரிய கருத்தைக் காணும்போது, நான் சுயவிவரத்திற்குச் செல்லும்போது அவர்கள் ஐடியில் டிபியோ அல்லது எந்த பதிவுகளும் இருக்காது. ஃபேக் ஐடி ஆக, பணம் பறிக்கும் கும்பலாக தெரிந்தது’ என்றார்.
விடுங்க பூஜா.. பட்ட மரம் கல்லடி படாது. பழுத்த மரம்தானே கல்லடி படும். அதுபோல சொல்லடியை பொருட்படுத்தாது வெல்வதே சிறப்பு.