‘ரெட்ரோ’ காதல் கதையை எழுத யார் காரணம்?: கார்த்திக் சுப்பராஜ் விளக்கம்

வன்முறைச் சம்பவங்களை படமாக்கும் நிலையை மாற்றி, தற்போது காதல் கதையை எடுத்துள்ளார் ‘மெட்ரோ’ இயக்குனர். இதற்கான பின்னணி குறித்து பார்ப்போம்..

கார்த்திக் சுப்பராஜ் இயக்கி சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ பட இசை-டிரெய்லர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, கருணாகரன், நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

‘ரெட்ரோ’ படம் ஆக்‌ஷன் கலந்த லவ் ஜானரில் உருவாகியுள்ளது. இந்த கதையை எழுதுவதற்கு காரணம் என்ன என்பது பற்றி, கார்த்திக் சுப்புராஜ் தெரிவிக்கையில், ‘ரெட்ரோ எனக்கு மிகவும் ஸ்பெஷல் படம். நான் இயக்கிய ‘இறைவி’ படம் ரிலேஷன்ஷிப்பில் பெண்களுக்குச் சுதந்திரம் வேண்டும் என்பதாக இருந்தது.

பெண் என்பவள் எப்போதும் தன் சுதந்திரத்தை ஏன் ஓர் ஆணிடம் ஒப்படைக்கிறாள் என்ற கேள்வி என் சின்ன வயதில் இருந்தே இருந்தது. ஒரு காதல் கதையை எழுத வேண்டும் என்று நினைத்தேன்.

என் மனைவிகூட ஏன் வன்முறையான படங்களை எடுத்துக் கொண்டே இருக்கிறாய். காதல் படத்தை எடுக்க மாட்டாயா? என கேட்பார். அவ்வகையில் உருவான கதை என்றும் கூறலாம். இப்படத்தின் கதையை நான் பல வருஷத்துக்கு முன் எழுதினேன். கண்டிப்பாக இந்த திரைப்படம் உங்களுக்குப் பிடிக்கும்.

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை நிறைவு செய்த பிறகு, நானும் சூர்யா சாரும் சந்தித்தோம். நான் சூர்யா சாரின் ரசிகன். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என கனவு கண்டேன். இது ‘ரெட்ரோ’ படத்தில் நடந்திருக்கிறது’ என்றார்.

இது குறித்து நெட்டிசன்ஸ் ‘ எப்படியோ ஒரு வழியாக காதல் கதையை எழுதினாலும், அங்கேயும் வைலன்ஸ்சை வெச்சிட்டீங்களே சார்’ என கலாய்த்து வருகின்றனர்.

actor suriya in retro movie love story update