ரொமான்ஸ் பண்ணும் முத்து, மீனா.. கடுப்பில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
மீனாவும் முத்தம் ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருக்க ஃபோனை எடுக்க முடியாமல் ரோகினி கடுப்பாகி இருக்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை மூவரையும் வீட்டுக்குள் உள்ளே விடாமல் வெளியே தூங்க சொல்லுகிறார். விஜயா மனோஜ் ரவியை மட்டும் உள்ள கூப்பிடலாம் என்று சொல்ல இப்ப கூட நீ பிரிச்சி தான் பேசுவியா என்று வாயை அடக்குகிறார். ரோகினி போனை மனோஜ் கோட்டில் வைத்ததால் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு அது போட்டோ அங்கிள் என்று சொல்ல அவங்க இந்த டிரஸ்சோட இருக்கட்டும் நீங்க உள்ள போய் படுங்க என்று மீனாவும் சொல்ல யாரும் சொல்ல வேணாம் உள்ள போங்க என்று சொல்லுகிறார். மூவரும் வெளியே உட்கார்ந்து கொண்டு பேசிக்கொண்டிருக்க முத்து இவ்வளவு நல்ல நாள் குடிச்சிட்டு வந்தானா ஒரு நாள் கூட அப்பா என்ன வெளியே தள்ளுல ஆனா இன்னைக்கு உங்களால இப்படி வந்துட்டேனே என்று சொல்கிறார் பிறகு மனோஜ் பிச்சை எடுத்ததை பற்றி பேசி சிரித்து கொள்கின்றனர்.

உடனே மனோஜ் நான் ஒரு பெரிய பிசினஸ்மேன் ஆனா உன்னால அப்படி ஆக முடியுமா என்று முத்துவை பார்த்து கேட்க அவர் மனோஜ் படிக்கட்டில் உட்கார்ந்து இருப்பதை பார்த்து கையை தள்ளி விடுகிறார் உடனே அவர் கீழே போய் விழுந்து அங்கேயே படுத்து விடுகிறார். முத்துவோ அங்கே படுக்க ரவியும் முத்துவின் பக்கத்தில் படுத்து விடுகிறது. ஆனால் நீ நான் தூங்காமல் முழித்துக் கொண்டிருக்க முத்து கதவைத் தட்டிய உடன் திறக்கிறார். என்ன வேணும் கூப்டிங்களா என்று கேட்க கூப்பிட தான் ஆரம்பிச்சேன் என்று சொல்லிவிட்டு உள்ளே வர பார்க்கிறார் வெளியே போங்க மாமா சொல்லி இருக்காங்க இல்ல என்று சொன்னவுடன் தண்ணி வேணும்னா என்று கேட்கிறார் நானே எடுத்துக்கிட்டு வர என்று சொல்லிவிட்டு மீனா தண்ணி கொண்டு வந்து கொடுக்கிறார். டிரஸ் மட்டும் மாத்திக்கட்டுமா என்று கேட்க, வேண்டாம் அவங்களும் அப்படியே தான் இருக்காங்க நீங்களும் இருங்க என்று நீ நான் சொல்ல என்கூட பேசிக்கிட்டே இரு மீனா என்று கூப்பிடுகிறார். மறுபக்கம் ரூமில் ரோகினி மனோஜின் கோட்டில் இருக்கும் போனை எப்படி எடுப்பது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறார். முத்து வெளியிலும் மீனா உள்ளேயும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.
நான் எதுக்காக குடிச்சேன் தெரியுமா என்று மீனா கேட்க அதுதான் குடிக்கிறவங்க எல்லாரும் ஒரு கார்டு வச்சிருப்பிங்கலே சொல்லுங்க என்று மீனா கேட்கிறார். இதோ இங்க இருக்கானே ஓடு காலி இவன் ஒரு உதவியும் கேட்டு நின்னா சரி கூட பொறந்துட்டான்னு செஞ்சேன் ஆனா அவன் உன்னை ஏமாத்திட்டு போயிருக்கா அந்த பார்லர் அம்மா உன்னை மதிக்கிறதே கிடையாது அப்படி இருக்கும்போது அவன் கூப்பிட்ட உடனே நீ வந்த பத்தியா உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது அதனாலதான் குடிச்சேன் என்று சொல்லுகிறார். பிறகு மீனாவின் கைகளில் மாறி மாறி முத்தம் கொடுத்து கைகளை மறைத்து மறைத்து வெட்கப்படுகிறார்.
என்ன மீனா இந்த பணக்காரங்களா அழகு இந்த பார்லர் அம்மா அந்த பலகுரல் எல்லாம் நீ இன்னைக்கு எவ்வளவு அழகா இருந்தது தெரியுமா? செம்ம அழகா இருந்த மீனா என்று சொல்ல நீங்களும்தான் அழகா இருந்தீங்க என்று சொல்லிவிட்டு மாறி மாறி திருஷ்டி எடுத்துக் கொள்கின்றனர். இதையெல்லாம் பார்த்த ரோகினி கடுப்பாகி நம்மளே தூங்கிடுவோம் போல இவங்க என்ன தூங்காம உக்காந்துட்டு இருக்காங்க என்று டென்ஷன் ஆக இருக்கிறார்.
முத்து தூங்கினாரா? ரோகினியின் திட்டம் என்ன? என்ன நடக்கப் போகிறது? என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

