மீனாவுக்காக உதவிய அருண், ஸ்ருதியால் கடுப்பான நீத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனாவுக்காக அருண் பண உதவி செய்துள்ளார்.

SiragadikkaAasai Serial Today Episode Update 21-04-25
SiragadikkaAasai Serial Today Episode Update 21-04-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா வேலை பார்க்கும் ஹாஸ்பிடலுக்கு அருணை வர சொல்லுகிறார். அருண் வந்தவுடன் என்ன விஷயம் சீதா திடீர்னு வர சொன்ன ஏதாவது முக்கியமான விஷயமா என்று கேட்க ஆமாம் என்று சொல்லி மீனாவிற்கு பணம் தேவைப்படும் விஷயத்தை சொல்லுகிறார்.நீங்க வெளியே யார்கிட்டயாவது கடன் வாங்கியோ இல்ல வட்டிக்கு வாங்கி கொடுங்க நான் காசு வந்ததும் திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்று சொல்ல என்னோட ஃபீல்டுல அப்படி எல்லாம் வாங்க முடியாது சீதா என்று சொல்லுகிறார்.

அப்படியா சரி விடுங்க நான் வெளியே பார்த்துக்குறேன் என்று சொல்ல ஆனால் அது ஒன்றும் பிரச்சனை இல்லை என்கிட்ட பணம் இருக்கு என்று சொல்லுகிறார். இல்லங்க அதெல்லாம் வேணாம் நம்மளும் இப்பதான் பழகி இருக்கோம் உங்ககிட்ட இருந்து ஹெல்ப் கேட்டது எனக்கு கஷ்டமா தான் இருந்தது என்று சொல்ல என்ன சீதா இப்படி பேசுற உங்க அக்காவுக்கு ஹெல்ப் கேட்கிற இத கூட நான் பண்ண மாட்டேன்னா, என்று சொல்லியும் சீதா மறுக்க சரி என்ன டெபாசிட் பணம் வந்த உடனே திருப்பி கொடுத்துட போற அவ்வளவு தானே என்று சொல்லி பிறகு நீ இரு பேங்க்ல போய் எடுத்துட்டு வந்துட்டேன் என சொல்லி கிளம்புகிறார்.

மறுபக்கம் முத்து டைனிங் டேபிளில் உட்கார்ந்து கொண்டிருக்க மீனா பிளாஸ்கில் காபி எடுத்துக்கொண்டு வந்து வைத்து விடுகிறார் ஊத்திக் கொடு மீனா என்று சொல்ல மீதியெல்லாம் ஊத்தி குடிக்க தெரியுது இல்ல அதே மாதிரி குடிங்க என்று சொல்லி கோபமாக சொல்லுகிறார் அந்த நேரம் பார்த்து ரவி ஸ்ருதி வர மீனா அவர்களுக்கு காபி ஊத்த போக ரவி வேண்டாம் என சொல்லி விடுகிறார் ஸ்ருதிக்கு மட்டும் ஊத்தி கொடுக்கிறார். ரவி முத்துவிடம் என்னடா நைட்டெல்லாம் சத்தம் அதிகமா இருந்தது என்று கேட்க அது பக்கத்து வீட்டுல வீடு காலி பண்ணாங்க பீரோ சத்தமா இருக்கும் என்று சொன்ன பீரோ என்ன உன் குரலில் பேசுவது என்று கேட்கிறார் என்னாச்சு அண்ணி என்று கேட்க உங்க அண்ண நேத்து டபுள் ஆல வந்து இருந்தாரு என்று சொல்ல ரவி முத்துவிற்கு அட்வைஸ் கொடுக்கிறார். உடனே அந்த கான்ஸ்டபிள் தான் என்ன டென்ஷன் ஏத்திட்டாரே என்று சொல்ல அதற்கு மீனா சொன்னதைப் போலவே ரவியும் செக் பண்றது அவங்களோட வேலை பண்ணா தானே குடிச்சிருக்கியா இல்லையான்னு தெரியும் இது நான் உங்க மேல தப்பு சொல்லி என்ன பண்ண முடியும் என்று சொல்ல, முத்து நீயும் அவளை மாதிரியே பேசாத என்று சொல்லுகிறார்.

உடனே முத்து அந்த கான்ஸ்டபிள் சப்போர்ட் பண்ற புருஷனுக்கு சப்போர்ட் பண்ண மாட்டேங்குற அவ என்ன படி அளக்கிறானோ இல்ல இவனுக்கு ஏதாவது நல்லது செய்றானா என்று கேள்வி மேல் கேள்வி கேட்க மீனா இதுக்கு மேல இங்கே இருக்க முடியாது என்று சொல்லிவிட்டு பூ கொடுக்க சென்று விடுகிறார். ரவி முத்துவிடம் உன்னால அண்ணி கோவமா போறாங்க சாப்பிட்டாங்களா இல்லையான்னு கூட தெரியல என்று சொல்ல எப்படியாவது போகட்டும் என்று முத்து சொல்லுகிறார். உடனே கொஞ்ச நேரத்தில் சீதா போன் போட்டு வேலை செய்யும் ஹாஸ்பிடலுக்கு மீனாவை வரச் சொல்ல தெரிந்த இடத்தில் பணத்தைக் கேட்டு வாங்கி இருப்பதாக சொல்லி ஒரு லட்ச ரூபாய் கொடுக்கிறார்.

ஆனால் மீனா முதலில் தயங்கி வாங்காமல் இருக்க சீதா வலு கட்டாயமாக கொடுக்க கண்கலங்கி சீதாவுக்கு நன்றி சொல்லி கட்டிப்பிடிக்கிறார். மறுபக்கம் ஸ்ருதி ரெஸ்டாரண்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்க அங்கு வந்த இரண்டு பேர் சுருதியிடம் டபுள் மீனிங் ஆக பேச ஸ்ருதி அவர்களுக்கு சூப்பில் மிளகாய் தூள் கலந்து கொடுத்து விடுகிறார் இதனால் ஒரு வாய் குடித்துவிட்டு சத்தம் போட்டதால் நீத்து மற்றும் ரவி வந்து என்ன பிரச்சனை என்று கேட்க சூப்ல இவ்ளோ காரமா போடுவீங்க என்று கேட்க நான் அவ்வளவு போடல என்று ரவி சொல்லுகிறார் ஸ்ருதி நான் தான் போட்டேன் என்று சொல்ல எதுக்கு இப்படி பண்ண சுருதி என்று கேட்கின்றனர் அவர்கள் என்கிட்ட டபுள் மீனிங் பேசுனாங்க அவங்க சாப்பிட வரல அவங்க பேசுனது எல்லாம் தப்பா இருந்துச்சு அதனால தான் அப்படி பண்ணேன் என்று சொன்னார் அதற்கு நீத்து அப்படி உங்களுக்கு ஏதாவது இருந்தா என்னயோ இல்ல ரவி கிட்டயோ தானே சொல்லி இருக்கணும் நீங்க எதுக்கு ஃபுட் எது மாதிரி பண்றீங்க இது என்னோட ரெஸ்டாரண்டுக்கு தானே கெட்ட பேரு வரும் நான் டெவலப் பண்றதுக்கு எவ்வளவு விஷயம் பண்ணிக்கிட்டு இருக்கேன் தெரியுமா என்ற ஸ்ருதி மீது கோபமாக கேட்டுவிட்டு வந்த கஸ்டமர்களிடம் மன்னிப்பு கேட்க அவர்கள் இனிமேல் நான் உங்க ஹோட்டலுக்கு வரமாட்டேன். ரிவ்யூ மோசமா தான் கொடுப்பேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட மீண்டும் நீத்து ஸ்ருதியிடம் பார்த்தீர்களா என்ன நடந்தது என்று சொல்ல ரவி நீத்து கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லுகிறார். ஆனால் ஸ்ருதி எனக்கு செல்ப் ரெஸ்பெக்ட் தான் முக்கியம் என் மேல எந்த தப்பும் இல்ல இதனால் அவங்களை வேலையை விட்டு நிறுத்த நாளும் பிரச்சனை இல்லை என்று சொல்லிவிட ரவி நீத்துவிடம் மன்னிப்பு கேட்கிறார் பிறகு நீத்து இந்த ஒரு வாட்டி வேலைய விட்டெல்லாம் நிறுத்தள ஆனா இதுக்கப்புறம் ஏதாவது நடந்தா கண்டிப்பா ஆக்சன் எடுப்பேன் என சொல்லி விடுகிறார்.

மனோஜ் குளிரில் நடுங்கி தூங்கிக் கொண்டிருக்க சத்தம் கேட்டு ரோகினி என்ன ஆச்சு என்று கேட்கிறார். மனோஜ் என்ன சொல்லுகிறார்? அதற்கு ரோகினி மனோஜுக்காக என்ன செய்கிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 21-04-25
SiragadikkaAasai Serial Today Episode Update 21-04-25