நந்தினியின் அழகை ரசிக்கும் சூர்யா, கடுப்பாகும் அர்ச்சனா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நந்தினியிடம் எனக்கும் தான் கூட பொறந்த அக்கா தங்கச்சி இருக்காங்க ஆனா அவங்களுக்கும் எனக்கும் இப்படி ஒரு பாண்டிங் இருந்தது இல்ல என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் அர்ச்சனா மினிஸ்டர் இடம் நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது இப்பவே சூர்யாவ வெளிய கொண்டுவர அவன் வெளிய வரணும் என்று சொல்லுகிறார். சூர்யாவும் நந்தினியும் பக்கத்தில் பக்கத்தில் படுத்து கொண்டிருக்க சூர்யா நந்தினி முகத்தை ரசித்து முத்தம் கொடுக்க போகிறார் என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
