வருத்தத்தில் இருக்கும் பாக்யா, செல்வி கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
பாக்யா வருத்தத்தில் இருக்க செல்வி கேள்வி கேட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி மற்றும் செழியன் இருவரும் சுதாகரை சந்தித்து பாக்யா சொன்ன விஷயங்களை பற்றி கேட்க முதல்ல எங்களோட குரூப்ல இணைக்கிறது தான் இருந்தோம் ஆனால் அதுக்கான ரூல்ஸ் எதுவோ இல்லன்னு எங்களோட மேனேஜ்மென்ட்ல சொல்லிட்டாங்க அதனால தான் இனியா பேர்ல மாத்த வேண்டியது ஆயிடுச்சு என்று சொல்லுகிறார் ஆனால் ரெஸ்டாரன்ட் மட்டும்தான் மாறி இருக்கும் மத்தபடி பாக்யா மேடம் அங்கு இருக்கிறவங்க எல்லாரும் அங்கே வேலை பார்க்கலாம் உங்க வேலையை செய்யலாம் என்று மீண்டும் கோபி மற்றும் செழியன் இடம் நம்ப வைத்து நாடகம் ஆடி பேசுகிறார் உடனே எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு என்று சொல்லிவிட்டு சென்றுவிட கோபி செழியன் இடம் இவர் சொல்றது நம்பர மாதிரியும் இருக்கு குழப்புற மாதிரி இருக்கு என்று சொல்ல இவர் போய் என்னப்பா பண்ணிட போறாரு என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி வருகின்றனர்.
வீட்டுக்கு வந்து கோபி பாக்கியாவிடம் முதலில் ரெஸ்டாரன்ட் அவங்களோட ரெஸ்டாரன்ட் கூட ஆட் பண்றதா தான் இருந்ததா ஆனால் அதுக்கான கரெக்டான ரூல்ஸ் ஏதும் இல்லாததுனால தான் இனியா பேர்ல மாத்தி இருக்காரு என்று சொல்ல பாக்யா கோபப்பட்டு இன்னும் நீங்க அவர் சொல்றதெல்லாம் நம்பிகிட்டே இருங்க நான் உன்னை முட்டாள் கிடையாது என்னோட ரெஸ்டாரன்ட் கையை விட்டுப் போனது எனக்கு தெரியும் நானே கையெழுத்து போட்டு கொடுத்துட்டேன் அதுல இருந்து நான் என்னை ஆறுதல் படுத்திக்க தான் பாக்குறேன் எனக்காக நீங்க போய் பேசி முட்டாள் ஆகாதீங்க என்று கோபப்படுகிறார்.
நீங்க வேணா அந்த ஆள நம்புங்க நான் நம்ப மாட்டேன் என் ரெஸ்டாரன்ட் கையை விட்டு போனது போனது தான் என்று கத்துகிறார். ஆனா ஒன்னு ரெஸ்டாரன்ட் போனதுக்கு கூட அவர மன்னிச்சிடுவேன் ஆனா என் பொண்ணுக்கு ஏதாவது பிரச்சனை நடந்தது நான் அவரை சும்மா விடமாட்டேன் என வார்னிங் கொடுத்துவிட்டு கோபமாக வெளியே செல்ல எழில் பின்னாலேயே போகிறார் ஆனால் பாக்யா என் பின்னாடி வராத எனக்கு தனியா இருக்கணும் என்று சொல்லிவிட்டு ரெஸ்டாரன்ட் வருகிறார். அமைதியாக உள்ளே வந்த பாக்யா செல்வியை பார்த்தவுடன் பேசப்போக செல்வி ஏதாவது வேலை இருக்கு வரேன் வரேன் என சொல்லி பாக்யாவிடம் பேசாமல் சென்று விடுகிறார். கொஞ்ச நேரம் கழித்து பாக்யா செல்வியை கூப்பிட ஆளுங்க வந்துகிட்டே இருக்காங்க அக்கா நான் பார்க்கிறேன் என்று சொல்ல அதற்கு பாக்யா இன்னும் எவ்ளோ பேர் இருக்காங்க அவங்க பார்ப்பாங்க என்று சொல்லுகிறார்.
என்ன செல்வி கல்யாணத்துக்கு வரல என்று கேட்க, இவ்ளோ பிரச்சனை ஆனதுக்கப்புறம் நான் கல்யாணத்துக்கு வந்தனா உங்க குடும்பத்துல இருக்குறவங்க என்ன சொல்லுவாங்க அக்கா என்ன கல்யாணத்தை நிறுத்த வந்தேன்னு சொல்லி மண்டபத்தில் இருந்து அசிங்கப்படுத்தி அனுப்புவாங்க தேவையில்லாத அசிங்கம் எதுக்குன்னு தான் வரல என்று சொல்ல நீ எனக்காக வந்திருக்கணும் செல்வி அந்த வீட்டோட உறவுக்காக வந்திருக்கணும் என்று சொல்ல என்னக்கா உறவு நான் உங்க வீட்ல வேலை செஞ்சேன் நீ எனக்கு சம்பளம் கொடுத்த அதைத்தாண்டி வீட்டு வேலை செய்றவங்களுக்கு என்ன உறவு கிடைக்கும் என்று பேசுகிறார். ஆகாஷ் எப்படி இருக்கான் என்று கேட்க உடனே செல்வி கண்கலங்க இதுக்கு தான் அக்கா நான் உன்கிட்ட பேசாம போயிடணும்னு நினைச்சேன் என்று சொல்லுகிறார் உன் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்ச மாதிரி என் பையனுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையும் என்று சொல்லி கண்கலங்குகிறார். நீயும் என்னை புரிஞ்சுக்கலயா செல்வி என்று கேட்க நான் நல்லா தான் புரிஞ்சுகிட்டேன் நீ உன் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்த மாதிரி நானும் யோசிக்கிறேன் அவ்வளவுதான் என்று சொல்லுகிறார்.
எல்லா பொறுப்பும் என்கிட்ட வந்த மாதிரி என் பசங்களோட வாழ்க்கைப் பத்தின முடிவ நான் தான் எடுப்பேன் யோசிச்சேன் ஆனா கருத்து சொல்ற உரிமை கூட எனக்கு இல்லைன்னு ஆயிடுச்சு என்று சொல்ல அவன் சரியாயிடுவாங்க வேகமா ஓடிக்கிட்டு இருந்தா நடுவுல தடுமாறி விழுந்து இப்போ எழுந்து ஓட ஆரம்பிச்சிருக்கான் என்று சொல்லிவிட்டு இனியா பாப்பாவோட கல்யாணம் அன்னைக்கு ஃபுல்லா இனியா பாப்பாதான் யோசித்தேன் நல்லாதான் இருக்கும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் பாக்கியா ரெஸ்டாரன்ட் வெளியில் தனியாக உட்கார்ந்து கொண்டிருக்க வேலை முடித்துவிட்டு அனைவரும் கிளம்புகின்றனர் செல்வி ரெஸ்டாரன்ட் பூட்டி விட்டு சாவி கொடுத்து கொடுத்துவிட்டு ரெஸ்டாரன்ட் இனியா பாப்பா பேருல மாத்தி எழுதினதா வேலை செய்றவங்க சொன்னாங்களே என்று பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து எழில் வருகிறார்.
பாக்யா என்ன சொல்லுகிறார்?அதற்கு செல்வி என்பதில் என்ன? எழில் என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
