
சோபிதா குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட நாகசைதன்யா..
சோபிதா குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் நாக சைதன்யா.

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருந்த வருபவர் நாக சைதன்யா இவர் சமந்தாவை காதலித்து திருமணம் செய்த நிலையில் சில ஆண்டுகளில் இருவரும் விவாகரத்து கொடுத்து பிரிந்தனர்.
அதனைத் தொடர்ந்து நாக சைதன்யா சோபிதா உடன் ஏற்பட்ட காதலால் சமீபத்தில் அவர்களுக்கு திருமணமும் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஏழாம் தேதி இவரது நடிப்பில் வெளியாக இருக்கும் தண்டேல் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு அவரது மனைவியான சோபிதாவின் சொந்த ஊருக்கு சென்று சில விஷயங்கள் பேசி உள்ளார்.
அதில் எனது படங்கள் எப்போது ரிலீஸ் ஆனாலும் விசாகப்பட்டினத்தில் ஓடியதா என்று தான் நான் பார்ப்பேன் ஏனென்றால் இங்கே நல்ல பெயர் பெற்றால் உலகம் முழுவதும் அந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்பதை எனது நம்பிக்கையாக இருக்கிறது. இந்த முறையும் எனக்கு விசாகப்பட்டின மக்கள் கை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன் இல்லையென்றால் “என் வீட்டம்மா” என்னை கலாய்த்து விடுவார் என்று பேசியுள்ளார்.
