ரஜினிகாந்த் பற்றி குஷ்பூ தெரிவித்த தகவல்கள் வைரல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி குஷ்பு தெரிவித்த தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்துப் பார்ப்போம்..

‘மெகா ஸ்டார்’ என்பதை தலைக்கு ஏறாமல் ரஜினி சார் இன்று வரை சாதாரணமாக இருக்கிறார். டிசைனர் வாட்ச், டிசைனர் ஷூ, டிசைனர் உடை எல்லாம் பயன்படுத்துவது இல்லை.

கோட் சூட் போடணும், எனக்கென்று ஒரு ஸ்டைலிஸ்ட் இருக்கணும். ஏதாவது நிகழ்ச்சிக்கு சென்றால் ஸ்டைலிஸ்ட்டா வந்து ஹேர்ஸ்டைல் பண்ணனும் என்றெல்லாம் எதிர்பார்க்க மாட்டார்.

முடி இல்லையா மொட்டைத் தலையாக வருவேன். சாதாரணமாக ஒரு வேட்டி கட்டுவேன். சிம்பிளா ஒரு பேண்ட் ஷர்ட் போடுவேன். அந்த காலத்தில், எந்த வாட்ச் கட்டினேனோ அதே மாதிரி கட்டிட்டு வருவேன். ஒரு சிம்பிளான மனிதர் ரஜினி சார்.

ஒருமுறை ஏவிஎம். ஸ்டுடியோவில் பேட்ச் ஒர்க் செய்து கொண்டிருந்தார்கள். ரஜினி சார் ஒரு சேரில் அமர்ந்திருந்தார். பக்கத்தில் ஒரு ஸ்டூலில் இளநீர் அல்லது மோர் இருக்க, கால்மீது கால்போட்டு ஒரு குடையை அவரே பிடித்துக்கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்.

நான் ‘என்ன சார் இங்கே இருக்கீங்க? என கேட்டதற்கு ‘ஷாட் ரெட் செய்து கொண்டிருக்கிறார்கள்’ என்றார்.

அப்போ, அவருக்கு கேரவன் கிடையாது. மத்த ஹீரோக்களுக்கு வாசலிலேயே கேரவன் நிற்கும். எங்களுக்கு கேரவன் வச்சிருக்காங்க. பேட்ச் ஒர்க் தானே எதுக்கு கேரவன், அது தேவையில்லாத செலவு என சொல்லிவிட்டார்.

அங்க ரூம் இருக்கு சார். நீங்க காட்டேஜுக்கு போகலாமே என்றேன். ‘காட்டேஜுக்கு போயிட்டு வந்தால் 15 நிமிடம் வேஸ்ட் ஆகும். இன்று மாலைக்குள் பேட்ச் ஒர்க் முடிக்கணும் என்றார்.

அவர் சொன்னதை கேட்டதும் தேவையா, உனக்கு.. கேரவன் தேவையா.. என என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

ரஜினிகாந்தே இந்த வெயில் காலத்தில் வெளியே அவரே குடை பிடித்து உட்கார்ந்திருக்கிறார். அதுவும் வாசலிலேயே உட்கார்ந்திருக்கிறார். நாம் ரூமுக்கு போயிட்டு இருக்கோம்னு ரொம்ப வெட்கமாக இருந்தது.

செட்டில் இருந்தாலும் அது கொண்டு வா, இது கொண்டு வா.. என அதிகாரம் செய்யாமல் அமர்ந்திருப்பார். ச்சே, இந்த மனுஷன் கிட்ட கொஞ்சமாவது நாம கத்துக்கலாமேனு இருந்தது’ என்றார் குஷ்பூ.

kushboo reveals an interesting information about rajinikanth