‘குட் பேட் அக்லி’ பற்றி கங்கை அமரன் பேச்சுக்கு, அவரது மகன் பிரேம்ஜி ஃபீலிங்ஸ்
‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜா இசையமைத்த பாடல்கள் இடம் பெற்றுள்ளது தெரிந்ததே. இது பற்றிய திரை வட்டார பரபரப்பு பார்ப்போம்..
‘குட் பேட் அக்லி’ படத்தில், இளையராஜா பாடல்களான, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக்குருவி, இளமை இதோ இதோ ஆகிய பாடல்கள் இடம் பெற்றிருந்தன. இந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.
இளையராஜாவிடம் முறையான அனுமதி வாங்காமல் அவரது பாடல்களைப் பயன்படுத்தினால், அவர்களுக்கு இளையராஜா தரப்பில் இருந்து வக்கீல் நோட்டீஸ் செல்வது வழக்கம்.
இதனால், இளையராஜாவுக்கு பணத்தாசை, அதனால்தான் இப்படி எல்லாம் பணம் கேட்கிறார் எனவும், பாடல்களின் மொத்த உரிமையும் தயாரிப்பாளருக்கு சொந்தம், இளையராஜா பணம் வாங்கிக் கொண்டுதான் இசையமைத்துக் கொடுத்தார் எனவும் பேசுபவர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன் தெரிவிக்கையில், ‘யாருக்கு வேண்டும் பணம். எங்களிடமே செலவு செய்ய முடியாத அளவுக்கு பணம் இருக்கிறது. உங்கள் பணம் எங்களுக்குத் தேவையில்லை. முறையான அனுமதி வாங்கியிருந்தால், அண்ணன் சும்மாவே கொடுத்திருப்பார். ஆனால், நீங்கள் முறையான அனுமதி வாங்காதபோது கோபம் வருகிறது’ என கூறியிருந்தார்.
இந்நிலையில், கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி தெரிவிக்கையில், ‘எனது அப்பா பேசியது, அவரது அண்ணனுக்கு ஒரு பிரச்சினை எனும்போது, அவரது அண்ணனுக்கு ஆதரவாக பேசியுள்ளார். நான் எனது அண்ணனுக்கு ஒரு பிரச்சினை என்றால் பேசுவேன் அல்லவா? அதுபோலத்தான். மற்றபடி, குட் பேட் அக்லி ‘தல’ நடித்த படம். ‘தல’ அஜித்தால் தான் படம் ஓடுகிறது’ என்றார். தற்போது பிரேம்ஜி பேச்சு ரசிகர்களால் வைரலாகி வருகிறது.
முன்னதாக, கங்கை அமரனின் மகனான வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மங்காத்தா’ படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. மேலும், இதன் இரண்டாம் பாகமும் உருவாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து, ஏகே மௌனம் கலைப்பாரா.?