சினிமாவுக்கு வந்ததற்கான காரணம் இது தான்.. உருக்கமாக பேசிய மாரி செல்வராஜ்..!

சினிமாவுக்கு வந்ததற்கான காரணத்தை குறித்து உருக்கமாக பேசியுள்ளார் மாரி செல்வராஜ்.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கர்ணன் மாமன்னன் வாழை போன்ற ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சமீபத்தில் இவரது இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. படம் இயக்க வருவதற்கு முன் அவரது வாழ்க்கையின் நடந்த விஷயங்களை பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.

ஆறு மாதம் தொடர்ந்து புத்தகங்களை படித்தேன் யார்கிட்டயாவது பேசிட மாட்டோமா இந்த கதை இப்படி இருந்துச்சுன்னு சொல்லிட மாட்டோமான்னு ஏங்கி இருக்கேன். அதுக்கப்புறம் ஒரு காலேஜ்ல என்னோட கதையை சொல்லி என்னோட முக பாவனை நான் கதை சொல்ற விதம் என்னோட சவுண்ட் எப்படி இருந்ததுன்னு பசங்க கிட்ட கேட்டேன்.

அதுக்கப்புறம் முடிவு பண்ணி தான் இயக்குனர் ராம் சாரா சந்தித்து முதல்முறையாக வாழை கதை குறித்து சொன்னதாகவும் இந்த படத்தில் டைரக்ட் பண்ண வேணாம். அதுக்கு அப்புறம் பண்ணு என்று சொல்லுகிறார் இந்த கதை நீ யாருன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் பண்ணனும் என்று சொல்லிவிட்டு இன்னொரு புது கதையை எழுத சொன்னார் அதுக்கப்புறம் தான் பரியேறும் பெருமாள் கதையை எழுதி இயக்கியதாக கூறியிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து நான் அதிகமாக புத்தகங்களை படித்து கதையை எழுதி இருந்தேன் ஆனால் பெரியதாக யாரும் விரும்பாததால் தான் சினிமா மூலம் சொல்லத் தொடங்கியதாக சொல்லி இருக்கிறார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

director mari selvaraj latest speech update

director mari selvaraj latest speech update