விவாகரத்து செய்ய முடிவு எடுத்த இனியா,பாக்யா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

Web Ads

இனியா விவாகரத்து முடிவெடுக்க, பாக்யா வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 08-07-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 08-07-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா வேலை பார்த்துக் கொண்டிருக்க நித்திஷ் தான் இனியாவின் கணவர் என தெரிய வந்ததும் நண்பர்கள் வந்து இனியாவிடம் கேட்கின்றனர். எப்படி இனியா இது மாதிரி ஒரு ஆளை கல்யாணம் பண்ணிக்கிட்ட லவ் மேரேஜ் அரேஞ்ச் மேரேஜ் என்று கேட்க இன்னொரு ஃப்ரெண்ட் கண்டிப்பா அரேஞ்சுடு மேரேஜா இருக்காது இப்படி ஒரு பையனை போய் யாராவது கல்யாணம் பண்ணி வைப்பாங்களா லவ் மேரேஜா தான் இருக்கும் இவன போய் எப்படி இனியா லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ற கேட்க இனியா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார் பிறகு வீட்டுக்கு வர, ஈஸ்வரி கோபி இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இனியா வந்தவுடன் ஹாலில் வந்த ஒக்காருகிறார். கோபி இனியாவிடம் இந்த விஷயம் ஆபீஸ்ல இருக்கிற உன்னோட ஃப்ரெண்ட்ஸ்க்கு தெரியாதுல என்று சொல்ல இனியா தெரியாது என்று மறைத்து விடுகிறார்.

Web Ad 2

ஈஸ்வரி நான் கோவிலுக்கு போக போறேன் நீ வரியா என்று கேட்க இல்ல பாட்டி நான் வரல என்று சொல்ல ஈஸ்வரி கிளம்ப ஒரு நிமிஷம் பாட்டி இன்னைக்கு நான் என் வாழ்க்கையில ஒரு முடிவெடுத்து இருக்கேன் அது எல்லார்கிட்டயும் சொல்லணும் நான் அம்மாவையும் அண்ணனையும் கூட்டிட்டு வரேன் என்று சொல்லி வர உடனே எழில் வருகிறார். உடனே எழிலை கட்டிப்பிடித்து இனிய அழ, ஏன் இனியா என்கிட்ட எதுவுமே சொல்லல என்று கண்கலங்கி கேட்கிறார். உடனே பாக்யா செழியன் வந்துவிட பாக்யா பேச வர என்கிட்ட பேசாதம்மா நான் உன்கிட்ட கோவமா இருக்கேன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட எதுவும் சொல்லல என்று கோபப்பட இனிய நான் தான் சொல்ல வேணாம்னு நெனச்சேன் என்று சொல்லுகிறார். அன்னைக்கு பிறந்தநாளுக்கு வந்த போயாவது சொல்லி இருக்கலாம் இல்ல இனியா என்று கேட்க, பரவால்ல நான் இன்னைக்கு நான் ஒரு முக்கியமான முடிவு எடுத்து இருக்க இது வீட்ல இருக்கிற எல்லாருக்கும் தெரியணும்னு நினைச்சா நீயும் வந்து இருக்க என்று சொல்லி நித்திஷை விவாகரத்து செய்வதாக சொல்லுகிறார்.

உடனே ஈஸ்வரி என் பேத்தியோட கழுத்துல இருக்கிற மஞ்சத்தாலி ஈரம் கூட ஆறல அதற்குள் விவாகரத்து வரைக்கும் வந்துடுச்சு என்று அழுது கொண்டே ரூமுக்குள் சென்று விட நீங்க எல்லாரும் எனக்கு ஏதாவது ஒன்னு பண்ணனும்னு நினைச்சீங்கன்னா எனக்கு விவாகரத்து வாங்கி கொடுத்துடுங்க என்று சொல்லிவிட்டு இனியா சென்று விடுகிறார்.எழில் நான் என்ன நினைச்சேனோ அதேதான் இனியா சொல்றா இப்படி பட்டவன் கூட வாழனும்னு அவசியம் கிடையாது நாளைக்கு நம்ம ஒரு அட்வகேட் பார்த்து விவாகரத்து பத்தி கேட்கணும் என்று சொல்ல பாக்யா இனியாவுக்கு விவாகரத்து வாங்குவதுதான் கரெக்டா இருக்கும் ஆனா அதுக்கான நேரம் இது கிடையாது பொறுமையாக தான் இருக்கணும் என்று சொல்ல எழில் கோபப்படுகிறார். செழியனும் எதுக்கு பொறுமையா இருக்கணும் என்று சொல்ல இப்பதான் இனிய வாழ்க்கையில ரொம்ப கஷ்டத்த அனுபவிச்சிருக்கா அவளுக்கு அதிலிருந்து கொஞ்சம் ரிலீஃப் கிடைக்கும் அதுவும் இல்லாம நித்திஷ் வீட்ல அவ்வளவு சீக்கிரமாக விவாகரத்து கொடுக்க மாட்டாங்க.

கொஞ்ச நாள் போகட்டும் விவாகரத்து வாங்கிக்கலாம் என்று முடிவு எடுக்க பாக்யா ரூமுக்கு வருகிறார் இனியா கழுத்தில் இருக்கும் தாலியை கழட்டி கையில் வைத்திருக்க பாக்யா வந்து பார்க்கிறார் உன்ன நான் ரொம்ப கஷ்டப்படுத்தறேன் அம்மா ஒரு ரிலேஷன்ஷிப் தேவையில்லை என்று முடிவு பண்ணும்போது அதை ஞாபகப்படுத்துற மாதிரி எந்த விஷயமும் இருக்க வேணாம்னு தோணுச்சு என்று சொல்லுகிறார். பிறகு பாக்யா இனியாவிடம் என்ன சொல்லுகிறார்? அதற்கு இனியாவின் பதில் என்ன? ஈஸ்வரி என்ன முடிவு எடுக்கிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 08-07-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 08-07-25