பணத்துக்காக பத்திரத்தை கேட்கும் சிந்தாமணி.. பார்வதிக்கு கிடைக்கப் போகும் அவார்ட்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

Web Ads

பணத்திற்காக சிந்தாமணி விஜயாவிடம் பத்திரத்தை கேட்கிறார்.

siragadikka asai serial today episode update 12-02-26
siragadikka asai serial today episode update 12-02-26

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்தோஷ் மற்றும் ஜீவா இருவரும் தடுத்தும் ரோகினி ஷோரூமுக்கு வர மனோஜ் இவரை எதுக்கு உள்ள விட்டீங்க என்று கேட்கிறார் என்ன மனோஜ் பேசிகிட்டு இருக்க என்று கேட்க ஆர்டர் கொடுத்தவர்களுக்கு பணம் அனுப்புறேன்னு சொல்லி அந்த கறிக்கடைக்காரனுக்கு பணத்தை அனுப்பி எல்லாரும் முன்னாடியும் என்ன அசிங்கப்பட வைத்துவிட்டாய் என்று சொல்லுகிறார் உடனே நான் அப்படி பண்ணல மனோஜ் என்று சொல்ல நடிக்காத நீதான் அனுப்புனனு எனக்கு தெரியும் என்று சொல்லுகிறார். உன் கூட இனிமே எனக்கு பேச விருப்பம் இல்லை இங்கிருந்து வெளியே போ என்று சொல்ல என்ன மனோஜ் சொல்ற நம்ம பிசினஸ் பார்ட்னர்ஸ் நான் எப்படி வெளியே போக முடியும் என்று சொல்ல இனிமே அது தேவை கிடையாது உன்னால வர வருமானம் எனக்கு வேண்டாம் என்று சொல்ல அப்போ பணம் எப்படி கொடுக்கிறது என்று கேட்கிறார் உடனே நான் அந்த பணத்தை உன்கிட்ட கொடுத்துவிடுகிறேன் என்று சொல்ல ரோகிணி நீ என்ன பண்ணாலும் நான் உன்னை விட்டு பிரியமாட்டேன் மனோஜ் என்று சொல்கிறார்.

எப்பவுமே நீ தான் என்னோட புருஷன் இது எப்பவுமே மாறாது என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் பார்வதியும் சிவனும் கதைகளை பற்றி பேசிக் கொண்டிருக்க மீனா வருகிறார் அப்போது பூஜைக்கும் நீயும் பூப்போற்று மீனா என்று சொல்ல மீனா பூஜை போட்டுக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சமூக ஆர்வலர்கள் போல சேனலில் இருந்து வருகின்றனர். அவர்கள் பார்வதியின் கதையை பாராட்டி பேச நீங்க இந்த காலத்துல இருக்கிற குழந்தைகளுக்கு நல்ல கதைகளை சொல்லி அவங்கள நல்வழிப்படுத்துறீங்க இதுவும் ஒரு சோசியல் சர்வீஸ் தான் என்று சொல்லுகின்றனர் உடனே விஜயா வர அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார் என்ன விஷயமா வந்து இருக்கீங்க என்று கேட்க உங்களுக்கு ஒரு அவார்ட் கொடுக்கலாம்னு இருக்கோம் என்று சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார் கதை சொல்றதுக்கு எல்லாம் எதுக்கு அவார்ட் என்று கேட்க அவங்க நிறைய குழந்தைங்களோட மனசுல நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கிறார்கள் இதுவும் ரொம்ப நல்ல விஷயம் என்று சொல்லுகின்றனர் உடனே பார்வதி சந்தோஷப்பட மீனாவும் கங்கிராஜுலேசன் ஆண்டி உங்களுக்கு இது கிடைக்க வேண்டிய அவார்ட் தான் என்று சொல்லுகிறார்.

உடனே அவர்கள் அங்கிருந்து சென்றுவிட கொஞ்ச நேரத்தில் சிந்தாமணியும் வருகிறார் மீனா சென்றுவிட பார்வதி நீங்க ரெண்டு பேரும் பேசறது எனக்கு எப்பவுமே சரிப்பட்டு வரமாட்டேங்குது நீங்க பேசுங்க நான் மேல போய் கதை எழுதிட்டு இருக்காங்க அதை பார்க்கிறேன் என்று சொல்லி சென்று விடுகிறார் பிறகு விஜயா ஏதாவது முக்கியமான விஷயமா என்று சிந்தாமணி கேட்க ஆமா அந்த ரோகினி எப்படியாவது என் பையன் வாழ்க்கையில் இருந்து துரத்தனும் அதுக்கு அவளால பட்ட கடன என் பையன் அடைக்கனும் அது எனக்கு அதுக்காக எனக்கு பணம் தேவைப்படுது என்று சொல்லுகிறார் இப்போ என்கிட்ட அவ்வளவு பணம் எதுவும் இல்ல மாஸ்டர் டெக்கரேஷனுக்கு செலவாயிடுச்சு வேணும்னா நீங்க அந்த பாத்திரத்தை மனோஜ்க்கு கடன் கொடுத்தவர் கிட்ட குடுங்க அதுக்கு மேல பணம் வாங்கிக்கலாம் என்று சொல்ல அதுவும் சரிதான் என விஜயா முடிவெடுக்கிறார்.

மறுபக்கம் கிருஷ்ணா ராம் லாயரை சந்தித்த முத்துவும் செல்வமும் கேஸ் பற்றி விசாரிக்க ஜாமீன் கிடைச்சிருச்சு ஆனா இந்த கேஸ் முடியற மாதிரி தெரியல அவங்க கேஸ் எப்படி ஒண்ணா திருப்பி வாங்க அவர்களுக்கு ஏதாவது அடிபட்டிருந்தா கூட பரவால்ல அவங்க இறந்திருக்காங்க அவங்க எப்படி ஒண்ணா பாயிண்ட்டா பேசுவாங்க என்று சொல்ல என்ன மேடம் நீங்களே போய் சொல்றீங்க என்று முத்து சொல்லுகிறார் நான் உங்களை பயமுறுத்துவதற்காக சொல்லவில்லை கொலை கேச கூட மாத்திடுவாங்க என்று சொல்ல செல்வம் அழுகிறார் உடனே இதுக்கு ஒரே வழி தான் இருக்கு இரண்டு பக்கமும் சம்பந்தப்பட்டவங்க சமாதானம் ஆயிட்டா கோர்ட் கேஸ்க்கு போகாமல் போலீஸ் ஸ்டேஷனிலேயே முடிஞ்சிடும் என்று சொல்ல கிருஷ்ணா ராம் நான் அவங்க சைடு இருக்கிற வக்கீல சந்திச்சு பேசி பார்க்கிறேன் என்று சொல்லுகிறார் பிறகு அவர்கள் அங்கிருந்து சென்று விடுகின்ற. மறுபக்கம் மனோஜ் போனில் தனியாக பார்த்து சிரித்துக்கொண்டிருக்க ஜீவாவும் சந்தோஷமும் என்னாச்சு என்று கேட்கின்றனர் அப்போது பொண்டாட்டியால தான் மன நிம்மதி கிடைக்கும் ஹார்ட்டுக்கு நல்லதுன்னு வர சொல்றாங்க என்று சொல்ல சந்தோஷ் கிண்டல் அடிக்கிறார்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து விஜயா வந்து சிந்தாமணியிடம் சொன்ன விஷயத்தை சொல்லி பத்திரத்தை வைக்கப் போகும் விஷயத்தை சொல்ல மனோஜ் பாத்துக்கலாம் கண்டிப்பா பிசினஸ்ல ப்ராஃபிட் எடுத்து அந்த பத்திரத்தை உங்களுக்கு மீட்டு கொடுத்துடுவேன் என்று சொல்லுகிறார். அதற்கு விஜயா என்ன சொல்லுகிறார்? மறுபக்கம் ரவி சுருதி இடம் என்ன கேட்கிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial today episode update 12-02-26
siragadikka asai serial today episode update 12-02-26