மீண்டும் தள்ளிப் போகும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு.. வைரலாகும் ஷாக் தகவல்!!
வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சூர்யா 45 படத்தில் பிஸியாக நடத்து வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பே வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற திரைப்படம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் சூர்யா மற்றும் வெற்றிமாறன் பிஸியாகவே இருந்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. எஸ் தானு தயாரிப்பது உருவாக உள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
தற்போது ஆகஸ்ட் மாதம் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக வெற்றிமாறன் தாணுவிடம் சொல்லி உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்தப் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
