தயவுசெய்து இதை பண்ணாதீங்க.. சூர்யா வைத்த வேண்டுகோள்..!

சூர்யாவின் லேட்டஸ்ட் பேச்சு இணையத்தில் வெளியாகியுள்ளது.

Please don't do this.. Suriya's request..!
Please don’t do this.. Suriya’s request..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. பிரம்மாண்டமாக வெளியாகி இருந்த இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்லலாம்.

அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார் எந்தத் திரைப்படம் வருகிற மே மாதம் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம் ,ஜோஜூ ஜார்ஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் சூர்யா சிகரெட் பிடிப்பது குறித்து பேசி உள்ளார். அதாவது, இந்தப் படத்திற்காக தான் நான் சிகரெட் பிடித்தேன் தயவு செய்து உங்கள் வாழ்க்கையில் சிகரெட் அடிக்காதீர்கள் ஆரம்பிச்சிட்டா விட முடியாது ஒன்னுதானே அடிச்சு பார்க்கலாம்னு நினைப்பீங்க ஆனா ஆரம்பிச்சா விடவே முடியாது என்று தனது அழுத்தமான பதிவை சொல்லியுள்ளார் இது மட்டுமில்லாமல் நான் அதை எப்போது ஆதரிக்க மாட்டேன் என்றும் சொல்லியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சூர்யாவின் இந்த பேச்சுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Please don't do this.. Suriya's request..!
Please don’t do this.. Suriya’s request..!