நட்புக்கு இல்லை எல்லை: நயன்தாரா-திரிஷா பதிவு, வைரல்..

நாங்க திக் ஃபிரண்ட்ஸ் என நயனும் திரிஷாவும் மகிழ்ந்துள்ளனர். இது பற்றிய தகவல் பார்ப்போம்..

நயன்தாராவும், திரிஷாவும் சேர்ந்து எடுத்த புகைப்படம் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அஜித்தின் ரேஸ் கிளப்பிற்கு சென்றனர். துபாயில் நடைபெற்று வரும் இந்த கார் ரேஸ் போட்டிக்கு நேரில் சென்ற நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் அஜித்தை சந்தித்து உரையாடிய காட்சிகள் வைரலானது.

இந்நிலையில், நயன்தாராவும் திரிஷாவும் படகு ஒன்றில் ஒன்றாக அமர்ந்தபடி எடுத்த புகைப்படத்தை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். ‘முஸ்தபா முஸ்தபா’ பாடலுடன் நயன்தாரா-திரிஷா வெளியிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் இருவரது ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.

சினிமாத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகைகளாக இருந்து வரும் நயன்தாரா மற்றும் திரிஷா இடையே பனிப்போர் நிலவி வருவதாக சினிமா வட்டாரங்களில் அவ்வப்போது கூறப்பட்டாலும், தாங்கள் இருவரும் நல்ல நட்பிலேயே இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் வகையில், ‘வானுக்கும் எல்லை உண்டு, நட்புக்கு இல்லையே’ என்ற வரிகளுடன் அவர்கள் பதிவிட்டுள்ள இந்த பதிவு, 15 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை தற்போது வரை பெற்றுள்ளது.

nayanthara and trisha friendship post goes viral
nayanthara and trisha friendship post goes viral