துருவ் ரொம்ப கஷ்டப்பட்டுட்டான்.. பைசன் படம் குறித்து மனம் திறந்த மாரி செல்வராஜ்.!!

பைசன் படம் குறித்து மாரி செல்வராஜ் மனம் திறந்து பேசி உள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக பலம் வருபவர் மாரி செல்வராஜ். இவர் தற்போது துருவ் விக்ரம் வைத்து பைசன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.இந்த திரைப்படம் வருகிற 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இந்த படம் குறித்தும் இதற்காக துருவ் விக்ரம் பட்ட கஷ்டங்களையும் மாறி செல்வராஜ் பேசியுள்ளார்.
பைசன் என் திரை வாழ்வில் ஒரு முக்கியமான படம் என்றும் இந்த கதையை மக்கள் பார்ப்பதன் மூலமாக ஒன்று நடக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார். இது மட்டும் இல்லாமல் இந்த கதையை அவ்வளவு எளிதாக சினிமா ஷூட்டிங் மாதிரி பண்ணி விட முடியாது ஓராண்டு பயிற்சி செய்து முழு கபடி வீரராக தென் தமிழகத்து கிராமத்து இளைஞனாக மாற கடுமையான உடல் உழைப்பு தேவைப்பட்டது ஆனால் படம் துவங்கிய கொஞ்ச நாளிலேயே துருவால் முடியவில்லை ரொம்ப கஷ்டப்பட்டுடான் நான் அவனிடம் வேறு ஒரு கதை பண்ணிடலாமா என்று கேட்டேன் அவன் இல்லை கஷ்டமா தான் இருக்கு ஆனா நீங்களும் இந்த படத்தை பண்ணனும்னு வெறியா இருக்கீங்க நீங்க என்ன பாத்துப்பீங்கன்னு நம்புறேன் என்று சொன்னால் அந்த வார்த்தைகள் என்னை அசைத்து பார்த்து விட்டது. என்று கூறியுள்ளார்.
இது மட்டும் இல்லாமல் என்னுடைய நலன் விரும்பிகள் படத்தை பார்த்துவிட்டு நீ சாதிச்சிட்ட நெனச்சதை அடைந்துவிட்டேன் என்று சொன்னார்கள் அதைக் கேட்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரிக்க செய்துள்ளது.
