ஜெயிலர் 2 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!
ஜெயிலர் 2 படம் குறித்து சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார் நெல்சன் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தப் படத்தின் லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகள் இந்த வாரம் மைசூரில் நடைபெற உள்ளதாகவும் அதற்கு அடுத்து இலங்கையிலும் சென்னையிலும் நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
