விவேக் இறப்பிற்கு வராததற்கு காரணம் இதுதான் : வடிவேலு பேச்சு..!

விவேக் மறைவிற்கு வராததற்கான காரணத்தை கூறியுள்ளார் வடிவேலு.

This is the reason why Vivek did not come to die Vadivelu speech
This is the reason why Vivek did not come to die Vadivelu speech

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவானாக இருந்து வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இமைவருடைய காமெடிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாமன்னன் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார்.

தற்போது அவரது நடிப்பிலும் சுந்தர் சி இயக்கத்திலும் கேங்கர்ஸ் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் வடிவேலுவிடம், மறைந்த நடிகர் விவேக்கின் இறுதிச் சடங்கில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த வடிவேலு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார். அதாவது விவேக்கின் மரணம் எனக்கு தாங்க முடியாத வேதனையை அளித்தது. அவரது இறுதிச் சடங்கிற்கு நான் ஏன் செல்லவில்லை என்று பலர் என்னிடம் கேட்டார்கள். ஆனால், நான் நேரில் அவரது வீட்டிற்குச் சென்று, விவேக்கின் மனைவி மற்றும் குழந்தைகளைச் சந்தித்து எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன் என்று கூறினார்.

மேலும் விவேக் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டுப் பிரிந்து விடுவான் என்று நான் நினைக்கவே இல்லை. அவன் இறந்த சமயத்தில் நான் மிகவும் மோசமான உடல்நிலையில் இருந்தேன். என் வீட்டிலேயே நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து பயந்து கொண்டிருந்தோம். அந்த சூழ்நிலையில்தான் நான் அவரது இறுதிச் சடங்கிற்குச் செல்ல முடியவில்லை என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

This is the reason why Vivek did not come to die Vadivelu speech
This is the reason why Vivek did not come to die Vadivelu speech