காப்புரிமை விதிமீறல்: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த கோர்ட் உத்தரவு

காப்புரிமை சட்டப்படி, ஏ.ஆர்.ரகுமானுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் காண்போம்..

ஆஸ்கர் புகழ், இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் காப்புரிமை விதிமீறல் சர்ச்சையில் சிக்கி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இதைத் தொடர்ந்து, பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் 2023-ல் வெளியானது.

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், ரவி மோகன், கார்த்தி, திரிஷா கிருஷ்ணன், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் இடம்பெற்ற ‘வீர ராஜ வீர’ என்கிற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ரூ.2 கோடி ஏ.ஆர்.ரகுமான் செலுத்த வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் தரப்பிலும் ‘வீர ராஜ வீர’ இந்த பாடல் இந்த பாடல் ‛சிவா ஸ்துதியை’ தழுவி உருவானதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. எனவே, காப்புரிமை சட்டப்படி ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடியை டில்லி ஐகோர்ட் பதிவாளர் அலுவலகத்தில் மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது.

அதாவது, பாடகர் வாசிஃபுதீன் தாகூர், தன்னுடைய தாத்தா மற்றும் தந்தை இயற்றிய சிவா ஸ்துதி இசையை கொண்டுள்ளது என்று தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

court order ar rahman to pay rs 2 crores