சீதையாக நடிக்க முடியாமல் போனதற்கு யாஷ்தான் காரணம்: நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஆதங்கம்

இராமாயணம் படத்தில் சீதையாக நடிப்பதற்கு வந்த வாய்ப்பு (யாஷ் காரணமாக) நழுவியது என ஸ்ரீநிதி மறைமுகமாக தெரிவித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்..

ஸ்ரீநிதி ஷெட்டி ‘கேஜிஎஃப் சேப்டர்-1’ படம் மூலம் கதாநாயகி ஆனார். இப்படத்தில் யாஷ் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஜோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. பிறகு ‘கேஜிஎஃப் சேப்டர் 2’ படத்தில் மீண்டும் இணைந்து நடித்தனர். இந்தப் படமும் வரவேற்பு பெற்றது.

இதனைத் தொடர்ந்து, தமிழில் விக்ரமுக்கு ஜோடியாக ‘கோப்ரா’ படம் மூலமாக அறிமுகமானார். தற்போது, தெலுங்கில் ஹிட், த தேர்டு கேஸ் என்ற படத்தின் மூலம் நானிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் மே 1-ந்தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், ஸ்ரீநிதி ஷெட்டி தெரிவிக்கையில்,

இரண்டு பாகங்களாக உருவாகும் ‘ராமாயணம்’ படத்தில் சீதையாக நடிப்பதற்கு நடந்த ஆடிஷனில் கலந்து கொண்டேன். இந்த ஆடிஷனில் எனது நடிப்பு தயாரிப்பாளர்களுக்கு பிடித்துவிட்டது.

ஆனால், கேஜிஎஃப் படத்தில் ஹீரோவாக நடித்த யாஷ் ‘ராமாயணம்’ படத்தில் இராவணனாக நடிப்பதால், இந்த படத்தில் நான் நடிக்கவில்லை. அதற்கு காரணம் அவர் ராமனாக நடித்திருந்தால், நான் சீதையாக நடிப்பதற்கு சரியாக வந்திருக்கும். என்னுடைய ரோல் சீதை என்பதால், அவர் ராவணன் என்பதால் கெமிஸ்டரி ஒர்க் அவுட் ஆகாது. ஆதலால் தான் நான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.

இதன் காரணமாக இப்போது சீதையாக நடிகை சாய் பல்லவி நடித்து வருகிறார். ரன்பீர் கபூர் ராமனாக நடித்து வருகிறார். மேலும், ரவி துபே மற்றும் சன்னி தியோல் ஆகியோர் பலரும் நடித்து வருகின்றனர். நிதேஷ் திவாரி இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

actress srinidhi shetty for not playing sita in ramayana film