ஏகே 47 ஒரு துப்பாக்கி, ஆனால் ஏகே 54.. அரங்கத்தை அதிர வைத்த பார்த்திபன்..!

பார்த்திபனின் லேட்டஸ்ட் பேச்சு இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.
இந்த படத்தை தொடர்ந்து ஆதிக் தான் அடுத்த படத்தையும் இயக்கப் போகிறார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருப்பது வெளியாகி உள்ளது.
அதாவது ஏகே 47 என்பது ஒரு தானியங்கி அது ஒரு ரஷ்ய துப்பாக்கி என்றும் ஆனால் ஏகே 54 என்பது தான் இயங்க ரசிகர்கள் பயன்படுத்தாத ஒரு பீரங்கி என்று தெரிவித்துள்ளார்.
இது மட்டுமில்லாமல் தேர்தல் ஆணையத்திற்கு சென்று வாங்கிய ஒரு விசிலை விட தேர்ந்த ரசிகர்கள் அடித்து கிழிக்கக்கூடிய விசில்கள் கோடான கோடி என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

