காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை: நடிகர் நகுல் பேச்சு..

‘காதல் கதை சொல்லவா’ திரைப்பம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்..
ஜெயராம், விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள திரைப்படம் ‘காதல் கதை சொல்லவா’. ஷரத் இசையமைத்துள்ளார். ஷாஜன் களத்தில் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை பெப்பர் மின்ட் நிறுவனம் சார்பில் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரித்துள்ளார்.
தமிழ், மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 6-ந்தேதி வெளியாகிறது. இதன் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், இயக்குநர்கள் கே.எஸ். அதியமான், மனோஜ் குமார், ராஜ்கபூர் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இயக்குநர் சனில் பேசும்போது, ‘தமிழில் படம் இயக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. அது நிறைவேறியிருக்கிறது. மலையாளிகளின் கனவு தேசமாகத் தமிழ்நாடு இருக்கிறது. திரையுலகில் வெற்றி தோல்வி முக்கியமல்ல. ஒரு திரைப்படம் எடுக்கும்போது மனது நிறைய வேண்டும். இங்கே இத்தனை பேரை சேர்த்து வைத்திருப்பது சினிமாதான். இயக்குநர் அதியமான் எனக்கு காட்ஃபாதர் மாதிரி. இங்கே மொழி முக்கியமில்லை. திறமைதான் முக்கியம்’ என கூறினார்.
நடிகர் நகுல் பேசும்போது, ‘இப்படத்தின் தலைப்பே எனக்குப் பிடித்திருக்கிறது. காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதுதான் வாழ்க்கையின் அடிப்படை. இந்தப் படத்தில் வித்தியாசமான கதை உள்ளது. இதில் புதுமையான பாத்திரத்தில் நடித்திருக்கிறேன்’ என கூறினார்.
