சிவகார்த்திகேயன் என்னை மன்னிக்கவும்: அமீர்கான் ஃப்ளாஷ் பேக்

Web Ads

பாலிவுட் ஸ்டார் அமீர்கான், சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டதாக கூறியிருக்கிறார். இது பற்றி அவர் தெரிவிக்கையில்..

‘சிட்டாரே ஜமீன் பர்’ படத்தில் ஃபர்ஹான் அக்தர் இந்தி பதிப்பிலும், சிவகார்த்திகேயன் தமிழ் பதிப்பிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். ஆர்.எஸ். பிரசன்னாவுடன் ‘சிட்டாரே ஜமீன் பர்’ படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது கொரோனா தொற்று பரவியது.

இதனால், குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட சினிமாவிலிருந்து ஓய்வு எடுக்க முடிவெடுத்தேன். தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என குழந்தைகள் வலியுறுத்தியதால் ‘லால் சிங் சத்தா’ படத்தில் நடிக்கத் தொடங்கி. ஆனால், அந்தப் படம் தோல்வியடைந்ததால் மனம் உடைந்தேன். இதனால் ‘சிட்டாரே ஜமீன் பர்’ படத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்றேன்.

இதைக்கேட்ட இயக்குநர் பிரசன்னா சிரித்தார். நான் என்ன மனநிலையில் இருக்கிறேன் என்பதைப் புரிந்துகொண்ட அவர், ‘நடிக்க விருப்பமில்லை என்றால் தயாரிப்பாளராகப் பணியாற்றுங்கள்’ என்றார்.

இந்தி பதிப்பில் ஃபர்ஹான் அக்தரும், தமிழ் பதிப்பில் சிவகார்த்திகேயனும் நடிக்க ‘சிட்டாரே ஜமீன் பர்’ படத்தை இரண்டு பதிப்புகளாகத் தயாரிக்க முடிவு செய்தோம். அவர்களுக்குக் கதை பிடித்திருந்தது. நடிக்கவும் ஒப்புக்கொண்டனர்.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு, கதாசிரியர் மற்றும் இயக்குநருடன் ஒன்றிரண்டு வாரங்கள் அமர்ந்து கதையைப் படிப்பேன். அரை மணி நேரத்தில் ‘நான் ஏன் இந்தப் படத்தில் நடிக்கவில்லை?’ என்று யோசித்தேன். ஏழாவது நாள் கதாசிரியர் திவ்யா, பிரசன்னாவிடம் கதை பிடித்திருப்பதாகக் கூறினேன். ‘இப்போது நேரம் கடந்துவிட்டது. நடிகர்கள் தேர்வு முடிந்துவிட்டது’ என்றேன்.

அதற்குப் பிரசன்னா, ‘நான் சென்னையிலிருந்து வருகிறேன். நாங்கள் சுட்ட குண்டைத் துப்பாக்கிக்குள் திரும்பப் போடுவோம்’ என்றார். முதலில் என்னைத்தான் நடிக்க வைக்க நினைத்ததால், படக்குழுவினருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஃபர்ஹான் மற்றும் சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டேன். அவர்கள் ஏமாற்றமடைந்தாலும் என் நிலையைப் புரிந்துகொண்டனர்’ என்றார்.

aamirkhan to sivakarthikeyan for sitaare zameen par update