ரஜினியின் ‘தலைவர்-173’ பட தாமதத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கவிருக்கும் ‘தலைவர்-173’ படத்தின் தகவல்கள் பார்ப்போம்..
பார்க்கிங்” படம் மூலம் தேசிய விருது பெற்று கவனம் ஈர்த்தவர் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இவர், டான் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து NOC-க்காக தற்போது காத்துக்கொண்டு இருக்கிறார். ஏனென்றால், அவர் இதற்கு முன்பு சிம்பு நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. அப்படத்தை டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கவிருந்தார். சில காரணங்களால் அப்படம் துவங்க தாமதமானதால் ராம்குமார் பாலகிருஷ்ணன் தற்போது ரஜினி நடிப்பில் படமெடுக்க தயாராகி வருகிறார்.
எனவே, தன் அடுத்த படத்தை துவங்க ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு டான் பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து NOC தேவைப்படுகிறது. அவர்களிடமிருந்து முறையான அனுமதி பெற்ற பிறகு அதிகாரபூர்வமாக ரஜினியின் ‘தலைவர்-173’ படத்தில் கமிட்டாக உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த NOC வந்த பிறகு ‘தலைவர்- 173’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அந்த NOC கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு ரஜினியின் பிறந்த நாளில் ‘தலைவர்-173’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
இந்நிலையில், ராம்குமார் பாலகிருஷ்ணன் ரஜினியிடம் ஒரு பீல் குட் கமர்ஷியல் கதையை கூறியிருக்கிறார். பீல் குட் கமர்ஷியல் கதையாக இருந்தாலும் வித்தியாசமான பாணியில் ராம்குமார் பாலகிருஷ்ணன் ஒரு கதையை ரஜினியுடன் சொன்னதாக தெரிகிறது. அந்த கதையை கேட்ட ரஜினிக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
அதன் பிறகு கமலும் ராஜ் கமல் நிறுவனத்தை சேர்ந்தவர்களும் இக்கதையை கேட்டு ஓகே செய்திருக்கின்றனர். இதையடுத்து, ராம்குமார் பாலகிருஷ்ணன் ‘தலைவர்-173’ படத்தின் இயக்குநர் என்பது முடிவாகி விட்டதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

