Web Ad 2

ரிலீஸ் விவகாரம்: ஜனநாயகன்போல பராசக்தியும் நீதிமன்றத்தை நாடுகிறதா?

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் வருகிற 10-ந்தேதி ரிலீஸாகும் என்று அறிவிப்பு வெளியானது. இப்படத்தை இன்பன் உதயநிதி வழங்குகிறார். இந்நிலையில், நாளை மறுநாள் ரிலீஸ் இருக்க இதுவரை பராசக்தி படத்திற்கு சென்சார் சான்று வழங்கப்படவில்லை.

நாளைக்குள் சென்சார் போர்டு சான்று கொடுத்துவிடும் என்று பராசக்தி படக்குழு நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறது. அந்த நம்பிக்கையில் தான் பராசக்தி டீம் தொடர்ந்து படத்தை விளம்பரம் செய்து வருகிறது. படத்தில் இருக்கும் சில காட்சிகளால் ரிவைஸிங் குழுவுக்கு பராசக்தியை அனுப்பி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

விஜய்யின் கடைசிப்படமாக உருவான ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்று கிடைக்காமல் போனதால் ரிலீஸ் தள்ளிப் போடப்பட்டுள்ளது. நாளை (ஜனவரி 9-ந் தேதி) ரிலீஸை வைத்த நிலையில் சென்சார் சான்று கிடைப்பதில் தாமதமாகவே சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது ஜனநாயகன் படக்குழு. ஆனால், அந்த வழக்கில் நாளை தான் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

நாளை தீர்ப்பு என்பதால் சென்சார் சான்று இல்லாமல் படத்தை திரையிட முடியாது என தள்ளி வைத்துவிட்டது ஜனநாயகன் படக்குழு. இந்நிலையில் ஜனநாயகன் படத்தை போன்றே பராசக்திக்கும் சென்சார் சான்று பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. சான்று கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு செல்லும் முடிவில் இருக்கிறது பராசக்தி குழு என்று கூறப்படுகிறது.

parasakthi and jananayagan movies release broblems
parasakthi and jananayagan movies release broblems