இந்த செய்தியை பார்த்து மனமுடைந்து போனேன்: நடிகை ராஷ்மிகா கவலை
தெலுங்கானா அரசு எடுத்துள்ள முடிவு குறித்து, ராஷ்மிகா கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது பற்றிக் காண்போம்..
ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு கவலை. அதில், ராஷ்மிகா கவலை பொதுவாழ்வு கொண்டது.நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்து 3 ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சிக்கந்தர்’ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனைத்தொடர்ந்து, தனுஷுக்கு ஜோடியாக ‘குபேரா’ படத்திலும் ராஷ்மிகா நடித்து வருகிறார். இப்படம் வருகிற ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், தெலுங்கானா அரசை விமர்சனம் செய்யும் வகையில், நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தெலுங்கானாவில் 400 ஏக்கர் காட்டின் நிலத்தை அழித்து தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதனை கண்டித்து மாணவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அரசின் இந்த முடிவை கண்டிக்கும் விதமாக, ராஷ்மிகா மந்தனா தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அதில் இந்த செய்தியை பார்த்து மனமுடைந்து போனதாகவும், இந்த முடிவு மிகவும் தவறு என்றும் கூறியிருக்கிறார். வீடும் முக்கியம், நாடும் முக்கியம், காடும் முக்கியம்தானே.!