நீண்ட நாள் ஆசை இதுதான்.. ஏ.ஆர் முருகதாஸ் ஓபன் டாக்..!
நீண்ட நாள் ஆசை குறித்து பேசி உள்ளார் ஏ.ஆர் முருகதாஸ்.

தமிழில் தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர் முருகதாஸ் அதனைத் தொடர்ந்து ரமணா, கஜினி, ஏழாம் அறிவு ,துப்பாக்கி ,கத்தி, சர்க்கார் போன்ற பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார்.
தற்போது சிவகார்த்திகேயன் வைத்து மதராசி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் அவரது நீண்ட நாள் ஆசை குறித்து பேசி உள்ளார். அதாவது சிக்கந்தர் படத்திற்குப் பிறகு ஒரு தமிழ் படத்தை முடிக்க வேண்டும் அதன் பிறகு ஷாருக்கான் உடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.அதைப்பற்றி யோசிப்பேன் கண்டிப்பாக அது நடக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
