கருப்பு படம் குறித்து நட்டி நட்ராஜ் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.இவரது தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கி வரும் கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் சுவாசிகா,இந்திரன்ஸ், யோகி பாபு, சுப்ரீத் ரெட்டி, நட்டி நடராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடைபெற்று வருகின்றனர்.இந்த திரைப்படம் பின்னணி வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் ரிலீசுக்கு ரெடி ஆகி வருகிறது.
தற்போது இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவலும் வெளியான நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நட்டி நட்ராஜ் படம் குறித்த சுவாரசிய தகவல்களை பகிர்ந்து உள்ளார்.
படம் பிரமாதமாக வந்திருக்கு எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாக இந்த படம் இருக்கும். நீதிமன்றத்தை செயல்படுத்த சில விஷயங்கள் இருக்குல்ல அதை இந்த படத்தில் சொல்லுவாங்க ரொம்ப சுவாரசியமாகவும் ஜாலியான படமாகவும் அதைவிட ஒரு நல்ல படமாக இருக்கும் மேலும் வித்தியாசமான கதையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.