வீடியோ எடுக்கும்போதே எனக்கு தெரியும்… அங்கு அந்த தம்பி மட்டும் தான் வீடியோ எடுத்தார்.
எனக்கு மனதில் ஒன்று வைத்துக் கொண்டு வெளியே வேறொரு விஷயம் பேசும் பழக்கம் இல்லை. சந்தோஷமாக இருந்தாலும், வலியாக இருந்தாலும், வேதனையாக இருந்தாலும் – அது எப்படி இருக்கிறதோ அப்படியே வெளிப்பட வேண்டும் என்பதே என் எண்ணம்.
அந்த வீடியோவுக்கு மானே தேனே சேர்த்து, நம்ம தம்பிகள் வேறு விதமாக பரப்பிட்டாங்க. ஆனால் அதைக் குற்றமாக நான் எடுத்துக் கொள்ளவில்லை; அதைப் பற்றி பேசிவிட்டு வருத்தப்படவும் இல்லை.
அது ஒரு அக்கறை… ஒரு வலி… என் மனதில் தோன்றியதை தான் நான் சொன்னேன்.
நடிகர் விஜய் தொடர்பான விவகாரம் குறித்து பேசியதற்கான விளக்கமாக, நடிகர் சமுத்திரக்கனி இவ்வாறு தெரிவித்துள்ளார்.