மெய்யழகன் படம் குறித்து இயக்குனர் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 96 படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரேம்குமார்.அதனை தொடர்ந்து நடிகர் கார்த்திக் அரவிந்த்சாமி போன்ற முன்னணி நடிகர்களை வைத்து மெய்யழகன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தில் ராஜ்கிரன், ஸ்ரீதிவ்யா ,தேவதர்ஷினி, இளவரசு, கருணாகரன் ,சரண் சக்தி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் பிரேம்குமார் பேசியுள்ளார் அதாவது மெய்யழகன் படத்தை மலையாளத்தில் எடுத்திருந்தால் தமிழ் ரசிகர்கள் கொண்டாடி இருப்பார்கள் என்றும் தமிழில் எடுத்ததுதான் தவறு என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் ஓடிடியில் எனக்கு பாராட்டுக்கள் கிடைத்துவிட்டது ஆனால் ரிவியூகளை பார்க்கும்போது அவர்களுக்கு மனரீதியான பிரச்சனை இருக்கிறது இதை சொல்வதில் எனக்கு எந்த ஒரு பயமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.