நடிகை நஸ்ரியாவுக்கு என்ன ஆயிற்று?: ரசிகர்கள் அதிர்ச்சி; ஆறுதல்
பகத் பாசிலின் மனைவியும் நடிகையுமான நஸ்ரியா பல மாதங்களாக தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார். தற்போது அதற்கான காரணம் தெரிந்து ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இது பற்றிய தகவல்கள் காண்போம்..
நீண்ட இடைவெளிக்கு பிறகு நஸ்ரியா, பாசில் ஜோசப்புடன் இணைந்து நடித்த ‘சூக்ஸ்மா தர்ஷினி’ படம் பெரிய வெற்றி பெற்றது.
சோஷிய் மீடியாவில் ஆக்டிவ்வா இருக்கும் நஸ்ரியா, பல மாதங்களாக இன்ஸ்டாவில் போஸ்ட் போடவில்லை. மேலும், எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் இருந்தார்.
இந்நிலையில், நஸ்ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்ட பதிவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘அனைவருக்கும் வணக்கம், நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.
நான் ஏன் சிறிது காலமாக தொடர்பு கொள்ள முடியாத சூழலில் இருந்து வருவது பற்றி உங்களிடம் தெரிவித்து கொள்ள விரும்பினேன். எல்லோருக்கும் தெரியும் நான் சமூவலைதளத்தில் எந்த அளவிற்கு ஆக்டிவாக இருப்பேன். ஆனால், கடந்த சில நாட்களாக Emotional wellbeing and personal challenges உடன் போராடி வருகிறேன்.
இதனால், யாருடனும் பேச முடியாமல் தூரத்தில் இருக்கும் நிலை ஏற்பட்டது. எனக்கு அழைப்பு விடுத்தவர்கள், என்னுடைய பதிலுக்காக காத்திருந்த அனைவருக்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த இக்கட்டான சூழலில் எனது 30-வது பிறந்தநாளை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் ‘சூக்ஸ்மா தர்ஷினி’ பட வெற்றி விழாவிலும் கலந்துகொள்ள முடியாமல் போனது. இவை அனைத்திற்கும் மன்னிப்பு கோருகிறேன்.
மேலும், நான் கூடிய விரைவில் மீண்டு வருவேன். இப்போது நான் நன்கு குணமடைந்து வருகிறேன். அதற்கு அதிக நேரங்கள் ஆகலாம். இதை புரிந்து கொண்டு ஆறுதல் தெரிவிப்பவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என நஸ்ரியா பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, நஸ்ரியாவின் கணவரும் நடிகருமான பகத் பாசில் தெரிவிக்கையில், ‘ஏடிஹெச்டி-ஆல் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறியிருந்தார். ஏடிஹெச்டி என்பது மூளையின் கட்டுப்பாடோடு தொடர்புடைய பிரச்னை. இதை டெவெலப்மென்டல் கண்டிஷன் என்போம்.
பொதுவாகவே பிறந்ததிலிருந்தே இந்தப் பிரச்னை இருக்கும். இந்த பாதிப்பு இருப்பது தெரிய வந்திருப்பதால் மருத்துவரை அணுகியுள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.