‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜா பாடல்கள் விவகாரம்: தயாரிப்பாளர் விளக்கம்
இளையராஜாவின் பாடல்கள் குட் பேட் ‘அக்லி’ படத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளது தொடர்பாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ள விளக்கம் காண்போம்..
அஜித் நடித்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்று, வசூலிலும் வரவேற்பு பெற்று வருகிறது.
இப்படத்தில், இளையராஜா இசையில் வெளிவந்த ‘ஒத்த ரூவா தாரேன், ‘இளமை இதோ இதோ, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி இளையராஜா தரப்பில் அவரது வழக்கறிஞர் ‘குட் பேட் அக்லி’ பட தயாரிப்பாளருக்கு ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது குறித்து தயாரிப்பாளர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ரவி சங்கர் விளக்கம் அளிக்கையில், அந்த பாடல்களைப் பயன்படுத்துவதற்கான அனைத்து நடைமுறைகளையும் நாங்கள் பின்பற்றியுள்ளோம். தொடர்புடைய இசை நிறுவனங்களிடம் முறையே அனுமதி பெற்றுள்ளோம். அவர்களுக்குப் பணம் கொடுத்திருக்கிறோம். தடையில்லா சான்றும் பெற்றுள்ளோம்.
இளையராஜாவிடம் இருந்து எங்களுக்கு எந்த நோட்டீஸும் இதுவரை வரவில்லை. அவர் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. நோட்டீஸ் கிடைத்ததும் எங்கள் சட்டக் குழு அதை சந்திக்கும்’ என தெரிவித்துள்ளார்.