விஜய் டிவியை விலைக்கு வாங்கிய பிரபல நிறுவனம்.. பேரதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

விஜய் டிவியை பிரபல நிறுவனம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் நிகழ்ச்சிகள் என இரண்டிற்கும் பெரும்பாலான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தற்போது விஜய் டிவி கலர்ஸ் நிறுவனத்துடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம் விஜய் தொலைக்காட்சியை கலர்ஸ் நிறுவனம் நல்ல விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது.இது மட்டும் இல்லாமல் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மாற்றப்படும் எனவும் சொல்லப்படுவதால் ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளர்களான பிரியங்கா மற்றும் கோபிநாத் இருவரும் நீக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கோபிநாத் தொகுத்து வழங்கி வந்த நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பிரியங்காவும் விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளனியாக இருந்த நிலையில் தற்போது அவரும் விலகுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது புத்தம் புது பொலிவுடன் புது நிகழ்ச்சிகள் துவங்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
புதியதாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மக்களை கவருமா? என்ன நடக்கப் போகிறது? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
