Pushpa 2

எனக்கு திருமணம் ஆகிவிட்டது: நடிகை டாப்ஸி ஓபன் டாக்

‘வெள்ளாவி வெச்சுதான் வெளுத்தாங்களா? வெயிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா?’ என்ற ‘ஆடுகளம்’ படத்தில் வரும் வரிகளுக்கு பொருத்தமானவர்தான் நடிகை டாப்ஸி.

இவர் திடீரென தற்போது, ‘எனக்கு கடந்த ஆண்டே திருமணம் ஆகிவிட்டது’ என கூறியுள்ளார். இது குறித்த விவரம் பார்ப்போம்..

நடிகை டாப்ஸி தனது தனிப்பட்ட வாழ்க்கை, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வது உள்ளிட்ட எந்தவொரு விஷயத்தையும் சொல்லமாட்டார். பொதுஇடங்களில் புகைப்படங்களுக்கும் போஸ் கொடுப்பதில்லை.

இத்தகைய கொள்கையோடு இவர், தனது காதலர் மத்யாஸ் போ என்பவரை டாப்ஸி திருமணம் செய்து கொண்டார். இது குறித்து தற்போது டாப்ஸி, ‘உண்மையில், எனது திருமணத்தை நான் பகிரங்கமாகச் சொல்லாததால், அது குறித்து மக்களுக்குத் தெரியாது.

எனக்கு இந்த வருடம் அல்ல, போன வருடம் டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. இன்று இதை நான் வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால் யாருக்கும் தெரிந்திருக்காது.

நாங்கள் எங்கள் பெர்சனல் வாழ்க்கையை அந்தரங்கமாக வைத்திருக்க விரும்பினோம். மேலும், அது பற்றி எந்த அறிவிப்பும் செய்ய வேண்டாம் என முடிவு செய்தோம்.

எனது சகாக்களின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் வெளிப்படையானதை நான் பார்த்திருக்கிறேன். அது அவர்களை பாதிக்கவும் தொடங்குகிறது. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அவர்களின் தொழிலில் ஏற்படும் உயர்வு தாழ்வுகளை பாதிக்கும்.

எனவே, இரண்டிற்கும் இடையே ஒரு கோட்டை வரைய முடிவு செய்தேன். 2013-ல் இருந்து எனது பார்ட்னரை எனக்கு தெரியும். அவரும் என்னை நன்கு அறிவார்’ என தெரிவித்துள்ளார்.

எப்படியோ., இருமனமும் ஒருமனதாக இல்லறம் நிலைத்தால், என்றும் நல்லறம் தான்.!