ஜி.வி.பிரகாஷும் சைந்தவியும் மீண்டும் இணைவார்கள்: இணையவாசிகள் சொல்லும் கணிப்பு
இசையும் குரலும் இணைந்தால் பாடலாகும். அதுபோல, ஜிவிபியும் சைந்தவியும் மீண்டும் இணைவர், காதலாகும்’ என நெட்டிசன்கள் கணிப்பு குறித்து காண்போம்..
தனுஷும், ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து, இரண்டு பிள்ளைகள் இருக்கும் நிலையில், விவாகரத்தும் பெற்று விட்டனர். இனியும் அவர்கள் சேர்வது போன்று தெரியவில்லை என்கிற முடிவுக்கு வந்து விட்டார்கள் வருத்தங்களுடன் ரசிகர்கள்.
இந்நிலையில், பாடகி சைந்தவி செய்த செயல், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விட்டது. அதாவது, ஜி.வி.பிரகாஷின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அழகாகப் பாடினார் சைந்தவி. அந்த வீடியோவை பார்த்து பலரும் அழுதுவிட்டார்கள்.
இந்நிலையில் இசை நிகழ்ச்சிக்காக ஜி.வி. பிரகாஷ் மேடையில் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, மகளை அங்கு அனுப்பி வைத்தார் சைந்தவி. அதை பார்த்தவர்களோ, தனுஷும், ஐஸ்வர்யாவும் சேர்வதாக தெரியவில்லை; ஆனால், இந்த ஜோடி சேர நிறைய வாய்ப்பிருக்கிறது. சில காலம் தனியாக வாழ விரும்பியிருக்கலாம். ஆனால், நிச்சயம் இந்த ஜோடி ஒன்று சேரும் என்கிறார்கள்.
சைந்தவியும் இன்ஸ்டாகிராமில் இருக்கும் திருமண புகைப்படங்களை நீக்கிவிடாமல் இன்னும் அப்படியே வைத்திருக்கிறார். பள்ளியில் படித்தபோதில் இருந்து 10 ஆண்டுகள் காதலித்து அதன் பிறகே திருமணம் செய்து கொண்டார்கள்.
திருமணமாகி 11 ஆண்டுகள் கழித்து, அவர்கள் பிரிவை அறிவித்ததும் காதலிக்கத் துடித்த பலருக்கும் காதல் மீதான நம்பிக்கை போய்விட்டது.
இந்நிலையில், பிரிவுக்கு பிறகு ஜி.வி. பிரகாஷும், சைந்தவியும் நடந்து கொள்ளும் விதம் ரசிகர்களுக்கு புது நம்பிக்கை அளித்திருக்கிறது. காலப் போக்கில் காதலாகி கசிந்துருகி மீண்டும் இணைவார்கள் என எதிர்பார்த்துள்ளனர்.