மூக்குத்தி அம்மன் 2 படத்தின் நயன்தாரா பிரச்சனை.. சுந்தர்.சி கொடுத்த பதில்..!

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் நயன்தாரா பிரச்சனை குறித்து சுந்தர் சி பதிலளித்துள்ளார்.

director sundar c about nayanthara issue

director sundar c about nayanthara issue

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து இருந்தார்.இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது.

இதனை சுந்தர் சி இயக்கி வருகிறார்.முதல் பாகத்தில் நடித்த நயன்தாராவே இரண்டாவது பாகத்திலும் அம்மனாக நடிக்க உள்ளார் மேலும் ரெஜினா,யோகி பாபு, ஊர்வசி, அபிநயா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் நயன்தாரா அசிஸ்டன்ட் டைரக்டருடன் சண்டை ஏற்பட்டதாகவும் இதனால் சுந்தர் சி நயன்தாராவை படத்திலிருந்து நீக்கி வேறு ஒரு நடிகையை நடிக்க முடிவெடுத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் அப்போதே சுந்தர்சியின் மனைவி குஷ்பூ இது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். இந்த விஷயம் அனைத்தும் பொய்யானவை என்றும் படப்பிடிப்பு நன்றாக நடந்து கொண்டிருக்கிறது என்றும் சொல்லியிருந்தார்.

தற்போது இந்த விஷயம் பற்றி இயக்குனர் சுந்தர்சியிடம் கேட்டபோது அவர் பதில் அளித்துள்ளார் அதாவது எனக்கும் நயன்தாராவிற்கும் எந்த பிரச்சனையும் கிடையாது இந்த செய்தி ஏன் பரவியது என்று தெரியவில்லை நயன்தாரா ரொம்ப டெடிகேட்டான நடிகை படப்பிடிப்பில் அரை மணி நேரம் கேர் இருந்தாலும் கேரவன் போக மாட்டார் லொகேஷன் இல் தான் இருப்பார் அது அவரது பழக்கம். இது மாதிரி வெளியாகும் கிசுகிசுகளுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்று பேசியுள்ளார்..

இதனால் நயன்தாரா மற்றும் சுந்தர் சி குறித்து பரவி வந்த தகவல்கள் அனைத்தும் வதந்தி என தெரிய வந்துள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

director sundar c about nayanthara issue

director sundar c about nayanthara issue