கருக்கலைப்பு குறித்து என் மகள் என்னிடம் கேட்ட கேள்வி: இயக்குனர் மிஷ்கின் ஓபன் டாக்..
தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, முகமூடி, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட படங்களை இயக்கி குறிப்பிடத்தகுந்த இயக்குனர்களில் மிஷ்கினும் உள்ளார்.
இவருக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கின்றார். தனது திருமண வாழ்வில் 8 ஆண்டுகள் இருந்த மிஷ்கின், பின்னர் மனைவியைப் பிரிந்து வாழ்கின்றார். ஆனால், இருவரும் இதுவரை விவாகரத்து கோரவில்லை.
தற்போது, இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம், பிசாசு 2. இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். படத்தின் சில முன்னோட்டக் காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், அவரது மனைவி குறித்தும், மகள் குறித்தும் கூறிய தகவல், பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் பேசியதாவது,
‘எனது மகள் தற்போது கட்டிடக் கலைத்துறை படித்துக் கொண்டு உள்ளார். ஒருமுறை எனது மகள், என்னிடம் வந்து கருக்கலைப்பு குறித்து கேட்டார்.
குறிப்பாக அவரது கல்லூரியில் இது தொடர்பாக விவாதித்ததாகவும், நீங்கள் அதிக புத்தகங்கள் படிப்பதால் உங்களது கருத்து என்ன எனத் தெரிந்து கொள்ள, தான் விரும்புவதாகவும் கூறினார்.
உடனே நான், ‘நான் என்ன நினைக்கின்றேன் என்பதைவிட, இப்போது கருக்கலைப்பு குறித்து உனக்கு என்ன தோன்றுகின்றதோ, அதுகுறித்து எழுது. ஒரு வருடத்திற்குப் பின்னர், அல்லது சில ஆண்டுகளுக்குப் பின்னர் இதே கருத்து இருக்கின்றதா? மாறிவிட்டதா? எனப்பார் எனக் கூறினேன். மேலும் எனது மகளின் கேள்விக்கு நான் கடைசிவரை பதிலே கூறவில்லை’ என்றார்.
இன்றைய தலைமுறைக்கு, ஆழ்ந்த பொருட்செறிவுடன் கொடுத்த விளக்கம் சிந்திக்கத்தக்கது, சிறப்பு.!