பாக்யா கேட்ட கேள்வி, பதில் சொல்ல முடியாமல் நின்ற குடும்பத்தினர், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்யா கேட்ட கேள்விக்கு குடும்பத்தினர் பதில் சொல்ல முடியாமல் இருந்துள்ளனர்.

BaakiyaLkashmi Serial Today Episode Update 24-04-25
BaakiyaLkashmi Serial Today Episode Update 24-04-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா சுதாகர் பேசியதை நினைத்து ரூமில் கதறி அழுகிறார். மறுநாள் காலையில் கோபி ஈஸ்வரி செழியன் மற்றும் ஏழில் நால் வரும் ஒக்காந்து இனி அனுப்பிய போட்டோக்களை பார்த்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க பாக்யா வருகிறார் ஈஸ்வரி பாக்யாவிடம் காபி கேட்க எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார். இனியா அனுப்பிச்ச போட்டோ எல்லாம் பார்த்தியா என்று கேட்க பார்த்தேன் என்று சொல்லிவிட்டு செல்ல, இப்ப எதுக்கு நீ மூஞ்ச தூக்கி பறன் மேல வச்சிருக்க உனக்கு சந்தோஷமாவே இருக்காதா என்று கேட்கிறார்.

உடனே எப்ப பாத்தாலும் என் பசங்களை பத்தி யோசிக்க முடியாது இல்ல என்ன பத்தியும் நான் யோசிக்கணும் என்று பாக்கியா சொல்லுகிறார். என்னம்மா ஆச்சு என்று எழில் மற்றும் செழியன் கேட்க ஒன்னும் இல்ல என்று சொல்லுகிறார். நீ இது மாதிரி இருக்க மாட்டமா ஏதாவது பிரச்சனையா என்று கேட்க எந்த பிரச்சனையும் இல்ல என்னோட ரெஸ்டாரன்ட்டில் இதுவரை யாரும் தொட முடியாத மைல் ஸ்டோன் தொட்டு இருக்கு என்று சொன்ன அப்ப சந்தோஷம்தானே படணும் என்று ஈஸ்வரி கேட்கிறார். ஆமா என் பொண்ணோட சேர்த்து என் ரெஸ்டாரண்டில் தாரை வார்த்து கொடுத்துட்டேன் இல்ல அதனால நான் சந்தோஷமா தான் இருக்கணும் என்று சொல்லுகிறார் உடனே ஆரம்பிச்சுட்டா அவர் இனியா பெயர்ல மட்டும் தானே எழுதணும்னு சொன்னாரு அப்புறம் என்ன என்று ஈஸ்வரி சொல்லுகிறார்.

உங்களுக்கு அது மட்டும் தானே தெரியும் அதுக்கப்புறம் அவர் பண்ணுது நேத்து வந்து பேசுனது எதுவும் உங்களுக்கு தெரியாது இல்ல நீங்க எல்லாரும் என்ன முட்டாள்னு நினைக்கிறீங்க கடைசியா நான் சொன்னது தான் எல்லாமே நடந்தது அவர் வந்து ரெஸ்டாரன்ட் கேட்டாரு நான் கொடுக்கல உடனே பொண்ணு கேட்டு வந்தாரு அப்ப கூட உங்க யாருக்கும் அதைப்பற்றி யோசிக்க தோணல, இப்போ உங்களுக்கு அந்த ரெஸ்டாரண்டுக்கு எந்த சம்பந்தமும் இல்லைன்னு என்ன துரத்திட்டாரு என்று கோபப்படுகிறார்.நீங்க யாரும் அதிர்ச்சி ஆகாதீங்க எல்லாம் எனக்கு தெரிஞ்ச விஷயம் தான். அன்னைக்கு பணம் கொடுக்கிறேன்னு சொன்ன ஆனா இன்னைக்கு சும்மாவே தந்துட்டீங்களே சம்மந்தி என கைதட்டி சிரிக்கிறாரு என்று சொல்லுகிறார். இதுக்கு மேல என்ன யாரும் எதுவும் சொல்லாதீங்க குறிப்பா ஒரு நல்ல அம்மாவானு கேட்காதீங்க எல்லாருக்கும் என்னை என்னமோ செஞ்சிட்டேன் என் பொண்ணுக்காக ரெஸ்டாரண்ட் கொடுத்துட்டேன் அவ்வளவுதான் எப்பவுமே ஜீரோல இருந்து ஆரம்பிப்பேன் அதே மாதிரி நான் இப்ப ஆரம்பிச்சுருக்கிறேன் இதுக்கு மேல எனக்கு யாரும் அட்வைஸ் பண்ண கூடாது என்று சொல்ல அதற்கு கோபி நம்ம சம்மந்தி பாத்தா தப்பான ஒரு மாதிரி தெரியல என்று சொல்ல நீங்க நம்ப வேண்டாம் நீங்க நம்பனும்னு அவசியம் கிடையாது என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் கோபி சுதாகர் வீட்டுக்கு வந்து சந்தித்து நடந்த விஷயங்களை பேச சுதாகர் என்ன சொல்லுகிறார்? அதற்கு கோபியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.

BaakiyaLkashmi Serial Today Episode Update 24-04-25
BaakiyaLkashmi Serial Today Episode Update 24-04-25