பல சோதனைகளை தாண்டித்தான் பிரகாசிக்க முடியும் என்று பேசியுள்ளார் ஆர்த்தி ரவி.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தற்போது பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும்.
கடந்த வருடம் மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவுத்திருந்தார். அதன் பிறகு சில நாட்கள் இன்ஸ்டாகிராமில் மாறி மாறி பதிவின் மூலம் சண்டை போட்டுக் கொண்டிருந்த இவர்கள் தற்போது அமைதியாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.அதாவது மனது கஷ்டமாக இருக்கும்போது பிரியாணி சாப்பிடுவது ஆறுதலாக இருக்கும் நடப்பதை அப்படியே ஏற்றுக் கொள்வதில் ஒரு அமைதி இருக்கிறது பதில்களை தேட விருப்பம் இல்லாத எனக்கு அமைதியே ஆறுதல் என்று கூறியுள்ளார்.
மேலும் வாழ்க்கை வெள்ளை காகிதம் போன்றது அதில் கருப்பு நிறத்தால் மட்டுமே எழுத முடிவது தான் வேதனை பல சோதனைகளை கடந்தாலே பிரகாசிக்க முடிகிறது என்று பேசி உள்ளார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.