விஜய் சேதுபதியின் பேச்சு வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் தலைவன் தலைவி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார்.
தற்போது இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி நித்யா மேனன் மற்றும் படத்தின் இயக்குனரான பாண்டிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு இருந்தனர்.
அப்போது தனது சொந்த வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது மனைவியின் கழுத்தை பிடித்து செவுத்துல அப்படியே வச்சிட்டேன். அதற்காக நான் ரொம்ப வருத்தப்பட்டு ஃபீல் பண்ணினேன் என்னதான் இருந்தாலும் நான் கை வைத்திருக்கக் கூடாது அஞ்சு நிமிஷம் தான் இருக்கும் அது எல்லாம் இரண்டாம் பட்சம் மேல கை வைக்கிறது தப்பு என்று சொல்லி மன்னிப்பு கேட்டுட்டேன் என்று கூறியுள்ளார்.
இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.