உதயநிதி, சினிமாவிலிருந்து விலகி அரசியலில் முழு கவனம் செலுத்த வேண்டும்: இயக்குனர் பேரரசு..

விஜய் மற்றும் உதயநிதி குறித்து பேரரசு தெரிவித்த கருத்துகள் காண்போம்..

ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றிருந்த இயக்குனர் பேரரசு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘விஜய் அரசியலில் முன்னேற வேண்டும் என்றால், மக்களின் தேவைகளுக்கு ஏற்ப புதிய கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்க வேண்டும். ஏற்கனவே உள்ள கட்சிகளின் கொள்கைகளை பின்பற்றுவது புதியதாகத் தெரியாது. அதனால், விஜய் மக்களுக்கு நன்மை செய்ய புதிய தீர்வுகள் கொண்டு வர வேண்டும்.

மேலும், விஜய்யின் அரசியல் பயணத்தில் அவருடைய ரசிகர்கள் தற்பொழுது தொண்டர்களாக மாறியுள்ளனர். இது, அவருக்கு பெரிய ஆதரவாக இருக்கும். ஆனால், அவருடைய கட்சி மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு, அவருடைய புதிய கொள்கைகள் மற்றும் திட்டங்களை தெளிவாக பரப்ப வேண்டும்.

ஒரு கட்சி வெற்றிபெறுவதை விட, அது மற்ற கட்சிகளை எதிர்த்துப் பேசவேண்டும். அது மக்களின் கவனத்தை அந்தக் கட்சியில் ஈர்க்க உதவும்.

விஜயின் அரசியல் பாதை சரியானது. ஆளும் கட்சியை விமர்சிக்காமல் எந்த கட்சியும் முன்னேற முடியாது. அதனால், விஜய் தெளிவாக இந்த முறையைச் சரியாகப் பின்பற்றுகிறார்.

இப்போது உதயநிதி அரசியலுக்கு வந்துவிட்டார். தற்போது, அவர் துணை முதல்வராக பதவியை வகிக்கின்றார். ஆனால், அவர் திரைப்படத்துறையில் தொடர்ந்து செயல்படுகிறார். உதயநிதி படங்களை வாங்கி வெளியிடுவதில் இருந்து விலக வேண்டும். விஜய் தன் நடிப்பை விலக்குவதாக அறிவித்த நிலையில், உதயநிதி அவ்வாறே படங்களை தயாரித்து வெளியிடாமல் அரசியலிலேயே முழு கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.

actor vijayDirector Perarasuudhayanidhiஅரசியல்உதயநிதி