திருமணமான கொஞ்ச நாளிலேயே குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது மனைவி.
தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ், பென்குயின் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ்.இவர் சினிமாவில் பெரியதாக சாதிக்க முடியவில்லை என்றாலும் சமையலில் கொடி கட்டி பறந்து வருகிறார் என்றே சொல்லலாம். பெரும்பாலான விஐபி ஃபங்ஷன்களுக்கு இவரது ஸ்பெஷல் சமையலில் இருந்து வருகிறது.
ஏற்கனவே ஸ்ருதி என்பவர் உடன் திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் நிலையில் சமீபத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா உடன் இரண்டாவது திருமணம் நடந்ததாகவும் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தனர்.
இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜன் இரண்டாவது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவரது மனைவி அறிவித்துள்ளார் இது மட்டுமில்லாமல் குழந்தைக்கு ராகா ரங்கராஜ் என பெயர் வைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
இந்த பதிவு வெளியாகிய இணையத்தில் வைரலாகி வருகிறது.