ஜெய் நடிக்கும் ஒர்க்கர் படம் குறித்து இயக்குனர் அப்டேட் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெய். பகவதி படத்தில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சென்னை 28, சுப்ரமணியபுரம், கனிமொழி, எங்கேயும் எப்போதும், நவீன சரஸ்வதி சபதம் ,ராஜா ராணி, வடகறி, திருமணம் எனும் நிக்கா போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
இவர் தற்போது ஒர்க்கர் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே இருந்து வரும் நிலையில் என் இந்த படத்தின் இயக்குனர் சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதாவது உண்மை உணர்வுகளின் சுவாரசியமான கதையாக ஓர்க்கர் திரைப்படம் இருக்கும் எனவும் இந்த திரைப்படம் சிறப்பாகவே தயாராகி வருவதாகவும் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ரசிகர்களும் இந்த படத்தை விரும்புவார்கள் என்றும் கூறியுள்ளார். இது மட்டுமில்லாமல் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து மக்களுக்கு வந்து கொண்டே இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரிக்க செய்துள்ளது.