ஞானபீட விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு அமித்ஷா வாழ்த்து!

இந்திய இலக்கியத்தின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் ஞானபீட விருது இந்த ஆண்டு பிரபல தமிழ் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 13-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில், மத்திய முன்னாள் அமைச்சர் கரண் சிங், ஞானபீட விருதை கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கி கௌரவித்தார்.

இந்நிலையில், ஞானபீட விருது பெற்ற வைரமுத்துவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கவிஞர் வைரமுத்துவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “இலக்கியம் மற்றும் இசை மூலம் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளீர்கள்” எனக் குறிப்பிட்டு, வைரமுத்துவின் படைப்பாற்றலையும் அவரது நீண்டகால இலக்கியப் பங்களிப்பையும் அமித் ஷா பாராட்டியுள்ளார்.

ஞானபீட விருதைப் பெற்றதன் மூலம் தமிழ் இலக்கியத்திற்கு மேலும் ஒரு பெருமையை வைரமுத்து சேர்த்துள்ள நிலையில், அவருக்கு தேசிய அளவில் பல்வேறு தலைவர்களும் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Amit ShahHome Minister Amit Shah Congratulates Jnanpith Award-Winning Poet Vairamuthu!Vairamuthu