இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான நான்காவது ப்ரோமோவில் ஜாக்லின் குடும்பத்தினர் வர கண்கலங்கி அழுகிறார்.ஜாக்குலின் அம்மா இதுவரைக்கும் ஜாக்குலின் அழுததே கிடையாது இங்கே வளர்ந்து தான் அழுவுறா என்று சொல்லுகிறார். ஜாக்லினிடம் மூன்று வாரம் இருந்துட்டு டைட்டில் வின்னர் வாங்கிட்டுவா என்று சொல்லுகிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது