ஊரடங்கு முடிந்ததும் தமிழில் இந்த நடிகரின் படம் தான் முதன் முதலில் ரிலீஸ் ஆகப் போவதாக கூறப்படுகிறது.
Tamil Movie Release After Lockdown End : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் ரிலீசாகாது வழக்கம். தற்போது ஒரு படம் கூட ரிலீசாகவில்லை.
இதற்கான காரணம் குரானா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தியேட்டர் போகின்றனர் மக்கள் கூடும் இடங்களுக்கு முற்றிலுமாக தடை விதித்துள்ளது.
தளபதி 65 சன் பிக்சர்ஸ் கூட.. தளபதி 66 இவங்க கூட தான் வெளியான அதிரடி அப்டேட்.!
இதன் காரணமாக புதிய படங்கள் எதுவுமே ரிலீஸ் செய்ய முடியவில்லை. அதே போல் எந்த வித படப்பிடிப்புகளும் நடைபெறவில்லை.
இந்த ஊரடங்கு முடிந்த பிறகு விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள இடம் பொருள் ஏவல் என்ற திரைப்படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனுராமசாமி இயக்கி உள்ளார். வெகுவிரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப்போற்று மற்றும் பல நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படங்கள் வரிசையாக ரிலீசாகும் என நாம் எதிர்பார்க்கலாம்.
ஆனால் தியேட்டர்களில் பழையபடி கூட்டம் வருமா? கொரானா அச்சம் காரணமாக தியேட்டருக்கு வருவதை தவிர்ப்பார்களா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.