நியாஸ் வெளியேற்றத்தால் சண்டக்கோழி சீரியலில் ஹீரோவாக நடிக்க போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சண்டக்கோழி. இந்த சீரியலில் நியாஸ் நாயகனான நடிக்க ரியா விஸ்வநாதன் நாயகியாக நடித்து வருகிறார்.
ஒவ்வொரு நாளும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரக்கும் பல ட்விஸ்ட்டுகளுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் மகாவுக்கும் விக்ரமுக்கும் எப்போது பழைய நினைவுகள் திரும்பும்? நந்தினியின் வில்லத்தனம் எப்போது தெரிய வரும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது.
அதே போல அவ்வப்போது இருவருக்கும் பழைய நினைவுகள் வந்து வந்து சென்று கொண்டிருக்கிறது, இப்படி விறுவிறுவிப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இருந்து நாயகனாக நடித்து வரும் நியாஸ் வெளியேற இருப்பதாக தகவல்கள் கசிந்திருந்தன.
அதே சமயம் நியாஸ் வெளியேறினால் இனி அவருக்கு விக்ரம் கதாபாத்திரத்தில் நடிக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்த நிலையில் பூவே பூச்சூடவா புகழ் மதன் நடிக்க போவதாக தகவல்கள் கசிய தொடங்கியுள்ளன. இதற்கான பேச்சு வார்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூடிய விரைவில் இவருக்கு பதில் இவர் என மதனின் காட்சிகள் இடம்பெறும் என தகவல்கள் கிடைத்துள்ளன.
பூவே பூச்சூடவா என்ற சீரியல் மூலமாக மதனுக்கும் அதிகமான ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் அவருடைய இந்த என்ட்ரி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.