ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கு நேர்ந்த சோகங்களை குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.
Saddest Moment in Aishwarya Rajesh Life : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு நடனம் ஆடினார்.
அதன் பின்னர்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து காக்கா முட்டை என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது வாங்கினார்.
தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இடம் பிடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் இங்கு மொத்தம் மூன்று அண்ணன்கள். அதில் ஒருவர்தான் கேளடி கண்மணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வரும் மணிகண்டன்.
எனக்கு பதினோரு வயது இருக்கும்போதே மூத்த அண்ணன் இறந்து விட்டார். அவர் அப்போது காதலித்து வந்ததாக அவருடைய மரணம் கொலையா தற்கொலையா என்பது கூட எங்களுக்கு தெரியாது என கூறியுள்ளார்.
மேலும் இரண்டாவது அண்ணன் ஹோட்டல் மேனேஜர் படித்துவிட்டு அப்போதுதான் சம்பாதிக்க தொடங்கினார். தன் மகன் சம்பாதிக்கிறான் என்ற சந்தோஷத்தில் என் அம்மாவும் இருந்தார். அந்த சமயத்தில் அவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார்.
நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போதே பெசன்ட் நகரில் புதிதாக ஒரு சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டது. அந்த கடையில் தயார் செய்யப்பட்ட சாஸ் ஒன்றை மார்க்கெட்டிங் செய்யும் வேலையைச் செய்தேன். இதன் மூலம் ஒரு நாளைக்கு எனக்கு 255 ரூபாய் சம்பளமாக கிடைக்கும்.
கொட்டும் பனியில் காதலனுடன் முத்தமழையில் விஜய் டிவி சரண்யா – வைரலாகுது வீடியோ!
அதன் பின்னர் நிகழ்ச்சிகளையும் ஈவன்ட்களையும் தொகுத்து வழங்கினேன். அதன் மூலம் 500 லிருந்து 1000 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும்.
இவைகளைத் தாண்டி வந்த பிறகு தான் சன் டிவி, கலைஞர் டிவியில் வாய்ப்பு கிடைத்தது என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.