இதெல்லாம் ஒரு மூஞ்சியா என்று கேட்டார்கள்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகை வேதனை.!!

இதெல்லாம் ஒரு மூஞ்சியா என்று கேட்டாங்க என பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகை பேசியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியலை முதல் பாகம் முடிந்து தற்போது இரண்டாம் பாகம் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது.
தற்போது மயிலின் அப்பா பாண்டியன் கடையில் வேலைக்கு சேர்ந்து விட்டு வேலையை செய்யாமல் பாண்டியனுக்கு கோபத்தை ஏற்படுத்தும் விஷயங்களை செய்து வருகிறார், இவரை என்ன செய்வது என புரியாமல் ஒரு பக்கம் சரவணன் இருக்க மறுபக்கம் மீனாவை தனியாக போகலாம் என செந்தில் கூப்பிட இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இந்த சீரியலில் சுகன்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சாந்தினி இவர் பேசியிருப்பது இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதாவது இதெல்லாம் ஒரு மூஞ்சியா நீ நடிச்சி எங்க ஜெயிக்கப் போற என்று கூறினார்கள் இது மட்டுமில்லாமல் எங்க அம்மாவே உன் இதெல்லாம் உனக்கு தேவையில்லாத வேலை என்று விமர்சித்தாங்க ஆனால் மக்கள் என்னை ஏற்றுக் கொண்டார்கள் என்று எமோஷனலாக பேசியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
